இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென இரா.முத்தரசன் வலியுறுத்துகிறார்

சமூக நீதி அமலாக்கத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், மத்திய, மாநில அரசுகள் இட ஒதுக்கீடு வழங்கி வருகின்றன. ஆனால் இதன் தொடச்சியாக பணி மூப்பு பட்டியலிடுவதி லும், பதவி உயர்வு வழங்குவதிலும் இடஒதுக்கீடு கடைப் பிடிப்பதில்லை. இதற்கான சட்டப்பூர்வ வழிவகைகள் செய்யப்படவில்லை என்பதால், பணிமூப்பு மற்றும் பணியுயர்வு வழங்கல் தொடர் பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள், சட்டத்தில் சில திருத்தங்களை செய் தது. இதனை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் செல்லாது என அறிவித்தன. இதனை எதிர் த்து தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைக் குழுவும் நடத்தி வரும் சட்டப் போராட்டத்தில் உச்ச நீதி மன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்திருந்தன. இதனை விசாரித்த மூன்று நீதிபதிகள் அமர்வு மன்றம், சீராய்வு மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இதனால் 2 லட்சத் துக்கம் அதிகமான அரசுப் பணியாளர்களுக்கு சமூக நீதி மறுக்கப்பட்டு, பாதிக்கப்படுவர். இதனால் சமூக நீதி வழங்கலின் நோக்கம் முழுமையடையாமல் தடைபட்டுவிடும் அபாயம் ஏற்பட்டுள் ளது. இது தொடர்பாக அரசியல் அமைப்புச் சட்டத்தில் பொருத்தமான திருத்தம் செய்து, பணி மூப் பு மற்றும் பணியுயர்வுகளிலும் இட ஒதுக்கீடு வழங்க சட்டப்பூர்வ வழிவகை செய்ய வேண் டும் என மத்திய அரசை வலியுறுத்துவதுடன், தமிழ்நாடு அரசும். முதலமைச்சரும், தமிழக மக்களின் கருத்தைத் திரட்டி மத்திய அரசுக்கு வலுவான அழுத்தம் கொடுக்க வேண்டும் என இந்தியக் கம் யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வா று     இரா.முத்தரசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.