‘இராவண கோட்டம்’ திரைப்படம் ஷாந்தனுக்கு திருப்பு முனையாக அமையுமென்கிறார் தயாரிப்பாளர் கண்ணன் ரவி

கண்ணன் ரவி குரூப் தயாரிப்பில், ஷாந்தனு பாக்கியராஜ் நடிக்க, விக்ரம் சுகுமாரன் இயக் கத்தில் உருவாகி வரும் ‘இராவண கோட்டம்’ திரைப்படம் நடிகர் ஷாந்தனுக்கு திரை வாழ் வில் திருப்பு முனை படமாக அமையும் என திரைப்படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி நம்பிக்கை தெரிவி த்தார். மேலும் அவர் கூறுகையில், “பொறுமையும் விடாமுயற் சியும் வரும் எத்தகைய தடை களையும் தகர்த்தெறிந்து இடையூறுகளை இல்லாமல் செய்யும் அதிசயத்தை நிகழ்த்தும்” என்ற ஊக் கமளி க்கும் உன்னதமான பொன்மொழி எப் போதுமே எனக்கு மிகவும் பிடிக்கும். இதன் தாக்கம் எனது தயாரிப்பிலும் சிறப்பாகவெளி ப்படுகிறது. கடந்த ஆண்டே ‘இராவண கோட் டம்’ படத்தை ஆரம் பித்து விட்டோம். செயல் வடிவம் கொடுத்து படத்தை உருவாக்க எங் கள் குழு வில் உள்ள ஒவ் வொருவரும் தங் கள் அதிக பட்ச உழைப்பைக் கொடுத்து பணி யாற்று கின்றனர். விக்ரம் சுகுமார னின் வலு வான கதையமைப்பு, ஷாந்தனு பாக்கியராஜ் போன்ற திறமை மிக்க நட்சத்திரங்கள் மற் றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் தொழில் நுட்பக் கலை ஞர்கள், ஆகிய வற்றுடன் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். ஆண்டுக்கு மூன்று மாதங்களே இருக்கும் கடுமையான கோடை கால சூழலில் முழுக் கதையும் நடைபெறும் வகையில் படத் தின் களம் அமைந்திருக்கிறது. கடந் த ஆண்டு நாங்கள் படப்பிடிப்பைத் தொடங் கியபோது மிகவும் சாதக மான தட்ப வெட்ப சூழலே நிலவியதால் மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்பே நாங்கள் படப்பிடி ப்பை முடித்து விட்டோம். அவசரத்தில் அள்ளித் தெளித்த கோல மாகிவிடக் கூடாது என்பதிலும், படத்தின் உள்ளார்ந்த சாராம்சத்தை சிதைத்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தோம். ஆயினும் இந்த ஆண்டு இதே பருவத்தில் படப்பிடிப்பைத் தொடர திட்ட மிட்டிருந்தபோது, உல கையே நிலை குலையச் செய்த ‘கோவிட் 19’ பெருந் தொற்றால் அது முடி யாமல் போனது. தற் போதைய வியாபார சூழலை நான் நன்கு அறிந்திருக் கிறேன் என்றாலும், ஷாந்தனு மற்றும் விக்ரம் சுகு மாரன் திறமை மீது கொண்ட முழு நம்பிக்கை காரணமாக இந்தப் படத்தில் முதலீடு செய்து, படத்தை எடுக்க இருக்கிறேன். சுமூகமான சூழல் ஏற்பட்ட பிறகு அரசின் அனுமதி கிடைத் ததும், முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நாங் கள் படப்பிடிப் பைத் தொடரவிருக்றோம். மேலும் ஷாந்தனு தற்போது கைவசம் வைத்திரு க்கும் நம்பிக்கை க்குரிய படங்கள், நட்சத்திர ஏணியில் அவரது கிராஃப் சீராக மேல் நோக்கி செல்ல உதவும் என்ப தால் எனது ‘இராவண கோட்டம்’ படத்துக்கு அது பெரிதும் பயன்படும்” என்றார்.