சாலையோர குடிசைவாசிகளுக்கு அரசு செலவில் கான்ங்கீரிட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தேனி மாவட்ட சுற்றுலா மாளிகையில்  தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் நடைபெற்று வரும் குடியிருப்புகள் கட்டுமானப்பணிகள் குறித்து துறை  சார்ந்த முதன்மை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் இன்று (18.07.2020) மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி  பல்தேவ் இ.ஆ.ப. முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் தெரிவித்ததாவது. 

தமிழக அரசு ஏழை எளிய மக்களின் நலன் கருதி அவர்களின் கோரிக்கைகளுக்கு முன்பாகவே பல்வேறு திட்டங்களை அறிவித்து அத்திட்டங்கள் அனைத்தும் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சென்றடையும் வண்ணம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி தமிழகத்தில் குடிசைகளே அல்லாது அனைவருக்கும் கான்கீரிட் வீடு கிடைக்கப் பெறும் வகையில் ஊராட்சி பகுதிகளில் வசிக்கின்ற மக்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் முதலமைச்சாpன் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் நகராட்சி மற்றும்  பேரூராட்சிப்பகுதியில் வசிக்கின்ற நகர்ப்புற மக்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அனைவருக்கும்  வீடு கட்டும் திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்தி அதன் மூலம் தகுதியான நபர்களை பயன்பெறச் செய்து  வருகிறது.

அதில் தேனி மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் நீர்நிலை புறம்போக்குகள் சாலைகள் மற்றும் இரயில்வே புறம்போக்கு  நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்து வரும் நபர்களை மாவட்ட நிர்வாகத்தால் கண்டறியப்பட்டு தமிழ்நாடு  குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மறுகுடியமர்வு செய்ய  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதும் மொத்தம் 2925 குடிசை வீடுகள்
கண்டறியப்பட்டு பயன்பெறும் வகையில் இடம் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.  இதில் ஒரு குடியிருப்பிற்கு பயனாளிகளின் பங்காக ரூ ஒரு இலட்சமும் மத்திய அரசின் பங்காக ரூ.1.50 இலட்சமும் தமிழக அரசின் பங்காக ரூ. 6 இலட்சமும் என மொத்தம் ரூ. 8.50 இலட்சம் மதிப்பீட்டில் ஒரு பயனாளிக்கு ஒரு குடியிருப்பு வீதம் கட்டி வழங்கப்படவுள்ளது.

இக்குடியிருப்பு பகுதியில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதி மழை சேகாpப்பு பேவர் பிளாக் நடைபாதை வசதி போன்ற  அடிப்படை வசதிகளுடன் ஒவ்வொரு குடியிருப்பிற்கும் 400 சதுரடி பரப்பளவில் வசிப்பறை படுக்கையறை சமையலறை  குளியலறை மற்றும் கழிப்பறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. மேலும் இத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தேவையான தொழில்  சார்ந்த பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வேலைவாய்ப்பினை உருவாக்கிட நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் மேற்கண்ட திட்டத்தின் கீழ் 2019-20-ஆம் நிதியாண்டில் தேனி வடவீரநாயக்கன் பட்டி பகுதியில்  ரூ31.17 கோடி மதிப்பீட்டில் 13 அடுக்கு மாடிகள் கொண்ட 312 குடியிருப்புகள் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளில் முதற்கட்டமாக 6 அடுக்குமாடிகளில் 144 குடியிருப்புகள் கட்டுமானப்பணிகளும் தப்புக்குண்டு பகுதியில்  ரூ.43.02 கோடி மதிப்பீட்டில் 18 அடுக்கு மாடிகள் கொண்ட 432 குடியிருப்புகள் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளில்  முதற்கட்டமாக 3 அடுக்குமாடிகளில் 72 குடியிருப் புகள் கட்டுமானப்பணிகளும் கோம்பை சிக்காட்சி அம்மன் கோவில்  அருகில் ரூ.47.99 கோடி மதிப்பீட்டில் 15 அடுக்கு மாடிகள் கொண்ட 480 குடியிருப்புகள் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளில் முதற்கட்டமாக 5 அடுக்கு மாடிகளில் 160 குடியிருப்புகள் கட்டுமானப் பணிகளும் நிறைவுற்று தற்சமயம் தயார் நிலையில் உள்ளன. மேற்கண்ட மூன்று பகுதிகளில் முழுமையாக நிறைவு பெற்ற குடியிருப்புகளை  வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்குள் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பு செய்திடவும, மீதமுள்ள குடியிருப்பு  கட்டுமானப்பணிகளை விரைந்து முடித்து வருகின்ற செப்டம்பர் மாதம் இறுதிக்குள் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பு  செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத் தப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப் பட்டு வரும் குடியிருப்பு களின் எண்ணிக்கை பணிகள் நிறைவு பெற்ற எண்ணிக்கை மேற் கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியவைகள் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள் விரிவாக எடுத்து ரைத்தனர். மாவட்டத்தில் உள்ள தகுதியான நபர்களுக்கு குடியிருப்புகளை வழங்குவதற்கு ஏதுவாக நடைபெற்று  வரும் இக்குடியிருப்பு பணிகளை விரைந்து முடிப்பதற்கு அலுவலர் களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். இக்கூட்டத்தில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேற்பார்வை  பொறியாளர் சண்முகசுந்தரம் உதவி பொறியாளர் மணிபாலன் உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து  கொண்டனர்.