மின் இணைப்பு கட்டண உயர்வை அரசு கைவிட வேண்டும் – இரா.முத்தரசன்

மின் இணைப்புக் கட்டணம், பிணை வைப்புத்தொகை, மின் அளவீட்டு கருவியின் வாடகை, மறு இணைப்பு கட்டணம் மற்றும் மேம்பாட்டு கட்டணம் ஆகியவற்றை பன்மடங்கு உயர்த்த அரசு திட்டமிட்டிருக்கிறது. கட்டண உயர்வு ரூ.1600 முதல் ரூ.6000-ம் வரை இருக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தகைய கட்டண விலை உயர்த்துவது பொது மக்களை மிகப்பெருமளவு பாதிக்கும்.
பொருளாதார மந்த நிலை, தொழில்கள் மூடல், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரிப்பு, அத்தியாவசிய பண்டங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் பொது மக்களுக்கு, மேலும் சுமையை அதிகரிக்கும் வண்ணம் மின் கட்டணங் களை உயர்த்துவது மனிதாபிமானமற்ற செயலாகும். ஆகவே மின் கட்டணங்களை பன்மடங்கு உயர்த்திட உத்தேசித்துள்ளதை அரசு முற்றிலுமாக கைவிட வேண்டு மென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலி யுறுத்தி கேட்டுக் கொள்கிறது.