இறுதிகட்ட படப்பிடிப்பில் சிபிராஜ் நடிக்கும் கொண்டிருக்கும் வால்டர்

சிபிராஜ் நடிக்கும் கொண்டிருக்கும் வால்டர் திரைப்பாட்த்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்க உள்ளது. சிபிராஜ் நடிப்பில் வால்டர்” திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடந்து முடிந்துள்ளது. இப்படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக ஷிரின் காஞ்வாலா நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்னின்றனர். தற்போது இவர்கள் இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் சென்னையில் கலந்து கொள்ளவுள்ளனர்.

நிறுவனத்தின் சார்பாக இப்படத்தை டாக்டர் பிரபு திலக் தயாரித்து வருகிறார். படம் பற்றி இவர் கூறியதாவது: “இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கும்பகோணத்தில் வெற்றிகரமாக நடந்துள்ளது. திட்டமிட்டபடி இப்படத்தின் வேலைகள் சரியாக சென்று கொண்டிருப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் சென்னையில் துவங்கி முழுவதையும் அங்கேயே முடிக்க திட்டமிட்டுள்ளோம்.” அதுமட்டுமல்லாமல் இப்படம் நல்ல வடிவில் சரியாக சென்று கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்ட தயாரிப்பாளர் டாக்டர் பிரபு திலக் கூறும்போது, “இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இப்படத்தின் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பில் பங்கு பெறுவது எங்கள் குழுவிற்கு மேலும் பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது. மேலும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் பாவா செல்லதுரை இப்படத்தில் இணைந்திருப்பது எங்களுக்கு கூடுதம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.” என்றார்.

தயாரிப்பாளர் டாக்டர் பிரபு திலக் இயக்குனர் அன்பரசனைப் பற்றி பகிர்ந்து கொள்ளும் பொழுது, “நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, ஆரம்பம் முதல் இறுதிவரை இப்படத்தின் கதையை சரியாக திட்டமிட்டுள்ளார் இயக்குனர் அன்பரசன். இப்படத்தின் முக்கியக்காட்சிகள் கும்பகோணத்தில் சிறப்பான முறையில் படமாக்கப் பட்டுவிட்டது. தற்போது இப்படத்தை முழுவதையும் பார்ப்பதற்கு ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.” “வால்டர்” விறுவிறுப்பான திரில்லர் திரைப்படம். இப்படத்தில் சிபிராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். “வால்டர்” என்ற தலைப்பிலேயே பெருவாரியான பார்வையாளர்கள் இதை கணித்திருப்பார்கள். சிபிராஜின் தந்தை சத்யராஜ் நடித்து மாபெரும் வெற்றியடைந்த “வால்டர் வெற்றிவேல்” படத்தின் தலைப்பின் ஆதர்ஷம் தான் இந்த “வால்டர்”. “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்தின் நாயகி ஷிரின் இப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சமுத்திரக்கனி இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.