கொரோனா தொறறிலிருந்து மீண்டுவந்த காவலர்களுக்கு காவல்த்துறை ஆணையர் வாழ்த்து தெரிவித்தார்

சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் 72 காவல் ஆளிநர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர். பின்னர் பூரண குணமடைந்து மருத்துவர்கள் அறிவுரைப்படி 13.7.2020 அன்று பணிக்கு திரும்பிய காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர், மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப வேப்பேரி காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பணிக்கு திரும்பிய 72 காவல் ஆளிநர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். பின்னர் அனைத்து போலீசாருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர்கள் அமல்ராஜ், இ.கா.ப, (தலைமையிடம்) R.தினகரன், இ.கா.ப., (தெற்கு), A.அருண், இ.கா.ப, (வடக்கு), N.கண்ணன், இ.கா.ப (போக்குவரத்து) P.C.தேன்மொழி, இ.கா.ப, (மத்தியகுற்றப்பிரிவு), இணை ஆணை யாளர்கள் R.சுதாகர், இ.கா.ப, (கிழக்கு) V.பாலகிருஷ்ணன், இ.கா.ப, (வடக்கு) M.V.ஜெயகெளரி, இ.கா.ப (போக்குவரத்து வடக்கு) S.லட்சுமி, இ.கா.ப (போக்குவரத்து தெற்கு) துணை ஆணையாளர்கள் R.திருநாவுக்கரசு, இ.கா.ப., (நுண்ணறிவுப்பிரிவு), M.சுதாகர், (நுண்ணறிவுப்பிரிவு) விமலா, (தலைமையிடம்), G.நாகஜோதி, (மத்திய குற்றப்பிரிவு) மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.