சத்துணவு பணியாளர்களை ஊக்குவித்திடும் வகையில் மாவட்ட அளவிலான சமையல் போட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் 13.08.2019 சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் சார்பாக புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ்
பணியாற்றி வரும் சத்துணவு பணியாளர்களை ஊக்குவித்திடும் வகையில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான சமையல் போட்டியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் பணியாளர்கள் மூலம் தயார் செய்து வைக்கப்பட்டிருந்தஉணவு வகைகளை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தொpவித்ததாவது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறையின் கீழ் 1224 குழந்தைகள் சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்கள் மூலமாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் சத்தான கலவை சாதம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்களை ஊக்குவித்திடும் வகையில் இன்றைய தினம் மாவட்ட அளவிலான சமையல் போட்டி நடத்தப்படுகிறது.
குறிப்பாக அடுப்பில்லா சமையல் எண்ணெய் இல்லா சமையல் இயற்கை உணவு ஆரோக்கியமான உணவு சிறுதானிய உணவு சிற்றுண்டி மற்றும் மாலை நேர உணவு என 7 தலைப்புகளின் கீழ் இப்போட்டி நடத்தப்படுகிறது.

இப்போட்டியில் மாவட்டத்திலுள்ள 11 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 1 நகராட்சி என மொத்தம் 12 குழுக்களாக 1 குழுவிற்கு சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் என தலா 2 நபர்கள் வீதம் பங்கேற்றிடும் வகையில் இப்போட்டி நடத்தப்படுகின்றது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.5000 பரிசுத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொpவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டஆட்சியாpன் நேரமுக உதவியாளர் (சத்துணவு) திரு.வீரப்பன் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலர் திரு.கே.சிவராமபாண்டியன் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி.வி.ஜெயந்தி உட்பட ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.