சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 644 ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்களை வழங்கினார்.

தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரியும் காவலர்களுக்கு தமிழக முதல மைச்சர் காவல் பதக்கங்கள் அந்தந்த நகரங்கள் மற்றும் காவல் மாவட் டங்களில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 2019ம் ஆண்டுக் கான தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள் பெறுவதற்கு, சென்னை பெருநகரக் காவல்துறையில் 10 ஆண்டுகள் எவ்வித தண்டனையுமின்றி சிறப்பாக பணிபுரிந்த சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் பணி புரியும் 230 காவல் ஆளிநர்கள், போக்குவரத்து காவலில் பணிபுரியும் 289 காவல் ஆளிநர்கள், ஆயுதப்படையில் பணிபுரியும் 27 காவல் ஆளிநர்கள் மற்றும் மத்திய குற்றப்பிரிவு, நுண்ணறிவுப்பிரிவு, குற்ற ஆவணகாப்பகம், நவீன கட்டுப் பாட்டறை, சென்னை பாதுகாப்பு காவல் உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகளில் பணிபுரியும் 98 காவல் ஆளிநர்கள் என மொத்தம் 644 ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்கள் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ள னர். இன்று (28.9.2019) காலை எழும்பூர், இராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடை பெற்ற இப்பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணை யாளர் திரு.அ.கா. விசுவ நாதன்,இ.கா.ப., அவர்கள் மேற்படிதேர்ந்தெடுக்கப்பட்ட 644 ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக் கங்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.


மேலும் இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர்கள் முனைவர் ஆர்.தினகரன்,இ.கா.ப. (வடக்கு), திரு.ஏ.அருண்,இ.கா.ப., (போக்குவரத்து), திரு.சி.&டவ;ஸ்வரமூர்த்தி,இ.கா.ப., (மத்திய குற்றப்பிரிவு), திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா,இ.கா.ப. (தெற்கு), இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.