பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாh;பாக மாணவ மாணவியர்கள் பங்கேற்ற சைக்கிள் விளையாட்டுப் போட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் இ.ஆ.ப. அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் பட்டிணம்காத்தான் இசிஆர் சாலை முன்பாக இன்று (22.09.2019) தமிழ்நாடு விளையாட்டுமேம்பாட்டு ஆணையம் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் இ.ஆ.ப. அவர்கள் மாணவ மாணவியர்கள் பங்கேற்ற சைக்கிள் போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்ப் 15ஆம் நாளினை சிறப்பாக கொண்டாடும்; வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக ஆண்டுதோறும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான சைக்கிள் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் இன்றைய தினம் இராமநாதபுரம் பட்டிணம்காத்தான் இசிஆர் சாலை முன்பாக பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மாவட்ட அளவிலான சைக்கிள் விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது.

இப்போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் இ.ஆ.ப. அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இவ்விளையாட்டு போட்டியானது 13 வயதிற்குட்பட்டோர் (10கி.மீ) 15 வயதிற்குட்பட்டோh; (15கி.மீ) மற்றும் 17 வயதிற்குட்பட்டோர் (20கி.மீ) என 3 பிரிவுகளாக மாணவ மாணவியர் என இருபாலருக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டன. இப்போட்டியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.லயோலா இக்னேஷியஸ் மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.டி.செந்தில்குமார் மாவட்ட விரைவு மிதிவண்டி கழக தலைவர் திருஆர். பால்பாண்டியன் மாநில துணைத் தலைவர் திரு.ஆர்.ஜான்சன் கலைச்செல்வன் இராமநாதபுரம் வட்டாட்சியர் திருமதி.கி.தமிழ்செல்வி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.