முருகப் பெருமானை இழிவு படுத்திய கறுப்பர் கூட்டத்தை வன்மையாக கண்டிப்பதாக சரத்குமார் கூறியுள்ளார்

தினமும் முருகனைத் துதித்து 108 முறை ஓம் நமசிவாய என்று சிவ பூஜை செய்து, தாய் தந்தையரை வணங்கி  சமத்துவமாக இருத்தல் அவசியம் என்று நாளை துவங்கு கின்ற என் கருத்து.. கறுப்பர் கூட்டமே நீங்கள்  இயக்கிவிடப்பட்ட மூடர்கள். உதவி செய்யாவிட்டாலும் பிறருக்கு இன்னல் தரவேண்டாம் என்பது பழமொழி. பல்லா யிரம் ஆண்டுகளாக நாம் வாழ்ந்து வருகின்ற கலாசாரம், தெய்வ வழிபாடு, நம்பிக்கை, இவைகளை கொச்சை படுத்துவர்களுக்கு கொடுக்கின்ற தண்டனை இனி ஆண்டாண்டு காலத்திற்கு எந்த அறிவு மூடர்களும் வாய்  திறவாமல் நம் ஹிந்துக் கடவுள்களை விமர் சிக்க முடியாத அளவிற்கு இருக்கவேண்டும். கனவில்கூட அவர்களுக்கு  அந்த எண்ணம் வரக்கூடாது, தப்பி தவறி கனவில் வந்தால் உடனே எழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும். எந்த மதத்தையும் இழிவு படுத்தக்கூடாது என்ற எண்ணத் தோடு அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் நம்மிடையே பிரிவினை என்ற விஷத்தை விதைப்பவர்கள் இவர்கள். ஒரு வாதத்திற்கு கேட்கிறேன் இந்த கறுப்பர் மந்தைகள் மற்ற மதத்தை அந்த மத போதனைகளை விமர்சிக்க தைரியம் இருக்கிறதா? ஹிந்துக்களை, ஹிந்து மதத்தை  இழிவுபடுத்தினால் யாரும் கேட்க மாட்டார்கள் என்று தொடர்ந்து விமர்சிக்கின்ற கூட்டத்தை குண்டர் சட்டத்தில் கைது  செய்து பாடம் புகட்டவேண்டும். விளம்பரம் தேடுபவர்கள் ஒடுக்கப்பட வேண்டும். முருகா நான் சிறப்பாக,  ஆரோக்கியமாக நோய் நொடியில்லாமல் வாழ்வதற்கு என் உடலில் உள்ள அனைத்து அங்கங்களை பாதுகாப்பாயாக என வேண்டுவதில் கறுப்ப மந்தைகளே உங்களுக்கு என்ன பிரச்சனை. கறுப்பர் கூட்டமே உங்களை வன்மையாக  கண்டிக்கிறேன். என்று தனது அறிக்கையில் சரத்குமார் தெரிவித்துள்ளார்.