63வது தமிழ்நாடு மாநில காவல் பணித்திறனாய்வுப் போட்டியில் 08 தங்கம், 10 வெள்ளி, 03 வெண்கலம் மற்றும் 8 சுழற்கேடயங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பெற்ற சென்னை பெருநகர காவல் ஆளிநர்களுக்கு காவல் ஆணையாளர் பாராட்டு.

காவல் துறையினரின் திறமையை வெளிக்கொணரவும், புலனாய்வுத் திறமையை மேம்படுத்திக் கொள்வதற்கும் மற்றும் பணித்திறமையை அதிகரிக்கவும் காவல் பணித்திறனாய்வு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக 2019ம் ஆண்டின் 63வது தமிழக காவல் பணித்திறனாய்வுப் போட்டிகள் வண்டலூரில் உள்ள தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஆவடியில் கடந்த 23.09.2019 முதல் 26.09.2019 வரை நடைபெற்றது. மாநில காவல் பணித்திறனாய்வில் 20 போட்டிகள், 6 பிரிவுகளின் கீழ் முறையே அறிவியல் சார்ந்த புலனாய்வு, நிபுணத்துவ புகைப்படம், கணிணி விழிப்புணர்வு, வீடியோ பதிவு, நாசவேலை தடுப்பு மற்றும் மோப்ப நாய்களின் திற மை ஆகிய பிரிவுகளில் நடைபெற்றது. மேலும் குற்ற விசாரணை, குற்றவியல் சட்டங்கள், விதிகள், நடைமுறைகள், மற்றும் நீதிமன்ற தீர்ப்புகள் பற்றிய எழுத்து தேர்வுகளும் நடத்தப்பட்டன. தமிழக காவல்துறையின் அனைத்து மாவட்டங்களும் கலந்து கொண்ட இப்பணித்திறனாய்வு போட்டியில், சென்னை பெருநகர காவல் துறை சார்பாக 13 பெண் காவல் ஆளிநர்கள் உட்பட 45 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர். இதில் சென்னை பெருநகர காவல் அணியி னர் 8 தங்கம், 10 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 21 பதக்கங்கள் மற்றும் 08 சுழற்கேடயங்களையும் வென்றனர். மேற்படி 63வது மாநில காவல் பணித்திறனாய்வு போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் மற்றும் சுழற் கேடயங்கள் பெற்ற சென்னை பெருநகர காவல் அணியினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 28.09.2019 அன்று நேரில் அழைத்து பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணை யாளர் திரு.ஊ.&டவ;ஸ்வரமூர்த்தி, இ.கா.ப., மத்திய குற்றப்பிரிவு துணை ஆணை யாளர்கள் திருமதி.ழு.நாகஜோதி, திரு.மு.ராஜேந்திரன், நவீன கட்டுப்பாட்டறை துணை ஆணையர் திரு.சாமிநாதன்,இ.கா.ப., மத்தியகுற்றப்பிரிவு உதவி ஆணை யாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.