கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான பாலன் இல்லத்தை விபச்சார விடுதி என விஸ்வா.எஸ் என்ற முகநூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது என்று கூறிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மேலும் தனது அறிக்கை யில் கூறியிருப்பதாவது. 95ஆண்டுகளாக நாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அடித்தட்டு மக்க ளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இந்த நீண்ட நெடிய, பயணத்தில் அந்தக் கட்சியின் செயல்பாடுகள், தமிழ்நாட்டுக்குப் பல நன்மைகளைப் பெற்றுத்தந்துள்ளன. இந்திய விடுதலை போராட்டம் முதல் அடித்தட்டு தொழிலாளர்களைப் பாதிக்கும் ஊதிய உயர்வு பிரச்சினைகள் வரை அனைத்து போராட்டங்களிலும் முன்னிலையில் போராடுவதில் இந்திய கம்யூனிஸ்ட் தோழர்களும் முக்கியமானவர்கள். எஸ்.ஏ.டாங்கே, ராஜேஸ்வர ராவ், ஜீவானந்தம், ஐயா ஆர். நல்லகண்ணு என பல எளிமையான தலைவர்களை உருவாக்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைமையகத்தை விபச்சார விடுதி என்றும் பெண் உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் அவரது மகனுடன் உள்ள புகைப்படத்தைப் பதிவு அவரை தரம் தாழ்ந்த வார்த்தைகளால் திட்ட மிட்டுப் பதிவு செய்துள்ளார் விஸ்வா. எளிமையின் சின்னமாக நம்மிடையே வாழ்ந்து வரும் விடுதலை போராட்ட வீரர் தோழர் இரா. நல்லகண்ணு அவர்களை இழிவுபடுத்தும் வகையில், சமூக அமைதி சீர்குலைத்து மோதலை உருவாக்கும் தீய உள்நோக்கத்துடன் முகநூலில் ஆபாசப்படம் போட்டுச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பதிவு செய்யப்பட்ட மூத்த அரசியல் கட்சியின் தலைமையகத்தையும் மூத்த விடுதலை போராட்ட வீரரையும் தரக்குறைவாக விமர்சனம் செய்து பதிவு செய்துள்ளது என்பது அமைதி யாக உள்ள தமிழகத்தில் வெறுப்புணர்வை தூண்டி, சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து மோதல் போக்கை உருவாக்கி அதில் ஆதாயம் தேடும் சிலரால் இதுபோன்ற பதிவுகளைத் திட்டமிட்டுப் பதியப்பட்டு வருகிறது. இந்த வெறுப்புணர்வை து£ண்டும் பதிவு குறித்துக் கடந்த 17.7.2020 அன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு இதுவரை சம்பந்தப் பட்டவரைக் கைது செய்து விசாரணை நடத்தாமல் உள்ளது காவல்துறை. காவல்துறையின் இதுபோன்ற அலட்சியப் போக்கைக் கண்டித்தும், ஜனநாயக இயக்கங்களையும், அதன் தலைவர் களையும் கொச்சைப்படுத்தும் நபர்களைக் கண்டித்தும் வரும் 22.7.2020 அன்று தமிழகம் முழு வதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டங் களில் முக கவசத்துடன், சமூக இடைவெளியைப் பின்பற்றி மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.