சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் சென்னை அரசு மருத்துவ கல்லூரி மாணவிகள் மற்றும் செவிலியர் பயிற்சி மாணவிகளுக்கு காவலன் SOS செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் தலைமையில் பெண்கள் கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களுக்கு நேரில் சென்று காவலன் SOS செல்போன் செயலி குறித்தும், அது செயல்படும் விதம் குறித்தும், இச்செயலியின் பயன்பாடு குறித்து எடுத் துரைத்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் பயனாக பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் காவலன் SOS செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து, காவல்துறையின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 12.12.2019 அன்று காலை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற காவலன் SOS செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் இச்செயலியின் பயன் மற்றும் பதிவிறக்கம் செய்வது குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை (Awareness Pamphlets) மருத்துவக்கல்லூரி மாணவிகள், செவிலியர் பயிற்சி மாணவிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு வழங்கினார். அதன்படி மருத்துவக்கல்லூரி மாணவிகள், செவிலியர் பயிற்சி மாணவிகள் காவலன் SOS செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர் (வடக்கு) திரு.ஆர்.தினகரன், இ.கா.ப., வடக்கு மண்டல இணை ஆணையாளர்
திரு.கபில்குமார்சரத்கர், இ.கா.ப, பூக்கடை துணை ஆணையாளர் திரு.S.ராஜே ந்திரன், இ.கா.ப, மருத்துவக்கல்லூரி முதல்வர், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்தவமனை ஊழியர்கள் மற்றும் சுமார் 1000க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவிகள், செவிலியர் பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டனர்.