தரமணி பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களில் போக்குவரத்தை ஓழுங்குப்படுத்தி போக்குவரத்து காவல் துறைக்கு உதவி செய்து வரும் பெண்மணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை, தரமணி, தந்தை பெரியார் நகர் காமராஜர் தெரு, எண்.6 என்ற முகவரி யில் திருமதி.சகுர்பானு, வ/45, க/பெ. அப்துல்ரகீம் என்பவர் தனியாக வசித்து வருகிறார். இவர் வேளச்சேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் வார்டு உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2003ம் ஆண்டு முதல் தரமணி பகுதியில் போக்குவரத்து போலீசாருடன் இணை ந்து போக்கு வரத் தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடு பட்டு வருகிறார். இவர் தன்னுடைய ஓய்வு நேரத்தில் தன்னுடைய வீட்டின் அருகில் உள்ள வேளச்சேரி தர மணி 100 அடி சாலை, கட்டபொம்மன் தெரு சந்திப் பில் போக்குவரத்து நெரிசல் மிக்க நேர மான காலை 8.00 மணி முதல் 11.30 மணி வரை மற்றும் மாலை 4.00 மணி முதல் 07.00 மணி வரை என இரு வேளைகளில், போக்குவரத்தை ஒழுங்கு ப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வேளச்சேரி போக்குவரத்து காவல் துறைக்கு உதவி செய்து வருகிறார். இதன் பயனாக மேற்படி இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற் படாமல் போக்கு வரத்து சீராக செல்கிறது. மேலும் பெண்மணி சகுர்பானு போக்கு வரத்து ஒழுங்குப் படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது வாகன ஓட்டிகள் முழு வதுமாக அவருக்கு ஓத்துழைப்பு நல்கி வருகின்றனர். தன்னார்வலராக போக்கு வரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் பெண்மணி சகுர்பானுவை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 11.12.2019 அன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.