COP visited IIT campus, Tondiarpet

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர். திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப. அவர்கள் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள மகாநதி தங்கும் விடுதியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அரசு அலுவல்கள், பணியாளர்களை சந்திக்க நேரில் சென்று, அவர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாடி நலம் விசாரித்து அவர்கள் பூரண குணமடைய வாழ்த்துக்களையும், அதற்கு முழு வீச்சில் ஏற்பாடுகளையும் செய்வதாக தெரிவித்து, அவ்விடத்தையும் ஆய்வு செய்தார்கள். உடன் கிழக்கு மண்டல காவல் இணைஆணையாளர் திரு.ஆர்,சுதாகர் இ.கா.ப. அவர்கள் மற்றும் மயிலாப்பூர் காவல் துணை ஆணையாளர் ஆகியோர் இருந்தனர். வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்திற்குட்பட்ட நேதாஜி நகர் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நோய்த்தடுப்பு ஏற்பாடுகள் மற்றும் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தும், அங்கு பணியிலிருந்தவர்களிடம் தருந்த அறிவுரை வழங்கினார்கள்.