“ராஜபுத்திரன்” திரைப்பட விமர்சனம்

கே.எம்.ஷபி தயாரிப்பில் மகா கந்தன் இயக்கத்தில் பிரபு, வெற்றி, கிருஷ்ணப்பிரியா, ம்ன்சூர் அலிகான், ஆர்.வி.உதயகுமார், கோமல் குமார், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, தங்கதுரை ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் ப்டம் “ராஜபுத்திரன்”. ராமநாதபுரத்தில் 1996 ஆம் ஆண்டில் நடக்கும் கதையாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. பிரபுவின் மகன் வெற்றி. மகன் வெற்றி மீது அளவுகடந்த பாசம் வைத்க்க்கிருக்கிறார் தந்தை பிரபு. ஒரு பெரிய வீடும் சிறிதளவு விவசாய நிலமும் உள்ள நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். மகன் வெற்றியை வேலைக்கு அனுப்பாமல் செல்லப்பிள்ளையாக வளர்த்து வரும் பிரபு, அந்த கிராமத்தில் மிகவும் மதிக்கப்படக்கூடியவராகவும் இருக்கிறார். இது ஒருபுறம் இருக்க ராமநாதபுரத்து இளஞர்கள் வெளி நாடுகளில் கூலி வேலைபார்த்து தங்களது சம்பள பணத்தை பெற்றோர்களுக்கு உண்டியல் (சட்ட விரோதமான ஹவாலா பணம்) மூலமாக அனுப்புகிறார்கள். அந்த பணத்தை கோமல் குமார் வேலையாட்களை வைத்து பட்டுவாடா செய்கிறார். இப்படி அரசுக்கு வரி ஏய்ப்பு செய்யும் தொழில் அதிபர்களின் கறுப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றி ராமநாதபுரத்தில் அசைக்க முடியாதா தாதாவாக இருக்கிறார். கோமல் குமார் இருக்கும் நாற்காலியில் தாதாவாக அமரவேண்டுமென்று ஆர்.வி.உதயகுமார் திட்டமிடுகிறார். உதயகுமாருக்கு துணையாக கோமல் குமாரிடம் வேலை செய்யும் லிவிங்ஸ்டன் துரோக வேலை செய்கிறார். இது ஒருபுறமிருக்க வெற்றியும்  கிருஷ்ணபிரியாவும் காதலிக்கிறார்கள். அதோடு பிரபுவுக்கு தெரியாமல் கோமல் குமாரிடம் வேலை செய்கிறார் வெற்றி. கோமல் குமார் கொடுத்தனுபிய உண்டியல் பணத்தை வெற்றி தொலைத்துவிடுகிறார். இதனால் கோபமடைந்த கோமல் குமார் வெற்றியை என்ன செய்தார்?. தொலைத்த பணத்தை சம்பாதிக்க வெளிநாடு செல்லவிருந்த வெற்றி வெளிநாட்டுக்கு சென்றாரா?. வெற்றியை காதலித்த கிருஷ்ண்பிரியா என்ன ஆனார்?. பலபேர்களை கொலை செய்த கோமல் குமாரும் லிவிங்ஸ்டனும் என்ன ஆனார்கள்?. மகனை கோமல் குமாரிடமிருந்து காப்பாற்ற பிரபு என்ன முடிவு எடுத்தார் என்பதுதான் மீதிக்கதை. பிரபுவின் நடிப்பு சொல்லித்தெரிய வேண்டியதில்லை. கன்னக்குழியழகு சிரிப்போடு திரை முழுவதும் நிறைந்திருக்கிறார். மகனின் நிலைகண்டு கொந்தளிக்கும் தந்தையின் மன நிலையை முகத்தில் தெரிக்கவிடுகிறார். தந்தைக்காகவே வாழ்கின்ற மகனை, வெற்றியின் நடிப்பில் காண முடிகிறது. காதலில் கனிவதையும் காதலனுக்காக வேங்கையாக பாய்வதிலும் கிருஷ்ணபிரியாவின் நடிப்பு கைதட்ட வைக்கிறது. துரையுலகில் தீப ஒளியாக பிரகாசிக்க வாய்ப்பிருக்கிறது. பல ஆண்டுகள் கழித்து லிவிங்ஸ்டனின் திரையில் காண்பது மனநிறைவாக உள்ளது. வில்லத்தனத்தில் விளாசுகிறார்.  அண்ணன் தங்கை பாசத்திற்கு “பாசமலர்” என்றால், தந்தை மகனின் பாசத்க்திற்கு “ராஜபுத்திரன்”. சோர்வில்லாமல் படத்தை நகர்த்தியிருக்கும் இயக்குநர் மகா கந்தன் பாராட்டுதலுக்குறியவர்.