பேரன்பும் பெருங்கோபமும் திரைப்பட விமர்சனம்

காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரிப்பில், சிவபிரகாஷ் இயக்கத்தில், விஜித் பச்சன், ஷாலி நிவேகாஷ், மைம்கோபி, அருள்தாஸ், தீபா, கீதா கைலாசம், சுபத்ரா ராபட், லோகு, சாய் வினோத், வலீனா, ஹரிதா, பாவா செல்லத்துரை ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “பேரன்பும் பெருங்கோபமும்”. 50 வயது மதிக்கத்தக்கவராக வரும் நாயகன் விஜித், ஒரு அரசு மருத்துவமனையில் செவியளாராக பணியாற்றி வருகிறார்.ந்த மருத்துவமனை சுகாதார அமைச்சராக இருக்கும் மைம் கோபியின் சொந்த தொகுதியில் அமைந்திருக்கிறது. ஒருநாள் அந்த மருத்துவமனையில் ஒரு குழந்தை காணாமல் போகிறது. விசாரணைக்குவரும் காவலர்கள் செவியளாராக இருக்கும் விஜித்தை சந்தேகித்து கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்கிறார்கள். அவ்விசாரணையில் விஜித் பல சம்பவங்களை காவலர்களிடம் கூறுகிறார். அதனைத் தொடர்ந்து விஜித் யாரென்று காவலர்கள் கண்டறிகிறர்கள். விஜித் தனது தாய்க்கு ஒரே மகன். 25 ஆண்டுகளுக்கு முன் பள்ளி படிப்பை முடித்திருக்கிறார். அவ்வூரில் நடக்கும் திருவிழாவில் விஜித்தின் நண்பன் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர் அதே ஊரில் ஒரு உயர்சாதிப் பெண்ணை காதலிக்கிறார். இந்த காதல் விவகாரம் பூதகரமாகி விடுவதல் பஞ்சாயத்து கூடுகிறது. பஞ்சாயத்தில், மைம் கோபியும் அவரது சகோதரரான அருள்தாஸும் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அக்கிராமத்து மக்களும் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காதலனை உயிரோடு எரிக்க, காதலியின் காதுகளில் விஷத்தை ஊற்றி மனநிலை பாதிப்படைய வைத்து ஊரில் சுற்றித்திரிய வைக்கிறார்கள். இப்படி ஒட்டுமொத்த கிராமுமே ஆணவப்படுகொலைக்கு ஆதராவாக இருக்கிறது. அதனால் தன் மகன் விஜித்தை கேரளாவுக்கு அனுப்பி வைத்து விடுகிறார் அவரின் அம்மா. அங்கு விஜித்தை, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஷாலி காதலிக்கிறார். ஷாலியை திருமணம் செய்து கொண்டு ஊருக்குள் தம்பதிகளக வருகிறார்கள். இவர்களை கண்டு அதிர்ச்சியாகிறார் விஜித்தின் தாயார். அதன் பிறகு இவரது வாழ்க்கை என்னவானது.? இதற்கும் குழந்தை கடத்தலுக்கும் என்ன சம்மந்தம்.? என்பதுதான் கதை. தமிழகத்தில் நடந்தேறிய ஆவண்ப்படுகொலைகளை கருவாக கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. பிரபல இயக்குனர் தங்கர் பச்சானின் மகன்தான் விஜித். மிகவும் நேர்த்தியாக தனது கதாபாத்திரத்தை செய்து முடித்திருக்கிறார் விஜித். நாயகி ஷாலியும் இக்கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வு தான். குழந்தையை வயிற்றில் வைத்துக் கொண்டு கருவக்காட்டிற்குள் ஓடும் காட்சியில் நம்மை கண்கலங்க வைத்துவிடுகிறார். காட்சிகளிலும் அழகு தேவதையாக காட்சியளித்திருக்கிறார். வில்லனாக மைம் கோபி, லோகு, அருள்தாஸ் இவர்கள் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.இளையராஜாவின் இசையில் பாடல்கள் ரகமாக இருந்தது. ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலமாக நின்றிருக்கிறது.