இது இந்தி அரசல்ல இந்திய அரசு’- என ஆயுஷ் அமைச்சக செயலருக்கு கமல்ஹாசன் நினைவூட்டி எச்சரிக்கிறார்

மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக் கான இணையவழி  புத்தாக்கப் பயிற்சி முகாமில் இந்தியில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டன. இதுகுறித்து தமிழக மருத்துவர்கள் இணைய  வழியில் ஆட்சேபம் தெரிவித்தபோது ஆயுஷ் அமைச்சக செயலரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு மக்கள்  நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் அனைத்து மாநில அரசுத் துறை களிலும்  பணியாற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான 3 நாட்கள் இணையவழி புத்தாக்கப் பயிற்சி முகாமை  மத்திய ஆயுஷ் அமைச்சகம் நடத்தியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மருத்துவர்கள் உள்ளிட்ட சுமார் 400 மருத்துவர்கள்  இம்முகாமில் கலந்து கொண்டனர். இதில் அனைத்து வகுப்புகளும் இந்தி மொழியில் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன.  இந்தியில் வகுப்புகளை நடத்துவது தங்களுக்குப் புரியவில்லை என்பதால் ஆங்கிலத்தில் நடத்தும்படி தமிழகத்தைச்
சேர்ந்த மருத்துவர்கள் ஆயுஷ் அமைச்சகத்துக்கு இணைய வழியில் தகவல் அனுப்பியுள்ளனர்.

மூன்றாவது நாள் வகுப்பை அமைச்சகத்தின் செயலாளர் வைத்ய ராஜேஷ் கொடேச்சா நடத்தியுள்ளார். அவரும் முழுக்க  முழுக்க இந்தி மொழியிலேயே வகுப்பை நடத்தியுள்ளார். ஆங்கிலத்தில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அவர்  ஏற்கவில்லை. தமக்கு சரளமாக ஆங்கில பேச வராது என்றும், அதனால் இந்தியில் மட்டும்தான் வகுப்பு நடத்த முடியும்
என்றும் கூறியுள்ளார். அப்போது அவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள் ளது. ஆந்திரா,  தெலங்கானா,கேரள மாநில மருத்துவர்களும் இதற்கு ஆட்சேபனை தெரிவித்துள் ளனர். இது தற்போது சர்ச்சையாகி  வருகிறது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸும், திமுக எம்.பி. கனிமொழியும் கண்டனம் தெரிவித்தனர். தற்போது  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். அனைவருக்கும் புரியும் மொழியில்
இயங்க வேண்டியது அரசின் கடமை எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த கமல்ஹாசனின் ட்விட்டர் பதிவு: “ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் தமிழ் புரியாமல் எப்படி எங்கள்  மருத்துவத்தைப் புரிந்து கொள்வர் என்ற கேள்வி எழுப்பாதது எம் மருத்துவர் களின் பெருந்தன்மை. அனைவருக்கும்  புரியும் மொழியில் இயங்க வேண்டியது அரசின் கடமை. இது இந்தி அரசல்ல. இந்திய அரசு என்பதை மறந்துவிட  வேண்டாம். வாழிய பாரதமணித் திருநாடு” என்று பதிவிட்டுள்ளார்.