பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் – மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

கொரோனா நோய்த் தொற்று காரணமாக இந்த ஆண்டு நடைபெறவிருந்த பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய் யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப் பட்டு கடந்த 10.8.2020 அன்று தேர்ச்சி முடிவுகள் வெளியிடப் பட்டன. இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத 10,742 தனித் தேர்வர்கள் விண்ணப்பித்தனர். பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப் பட்டபோது, தனித் தேர்வர்களின் நிலை குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை. தற்போது இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அரசு தேர்வுத் துறை அதிகாரிகள் ‘‘காலா ண்டு, அரையாண் டுத் தேர்வு மதிப்பெண், வருகை பதிவு அடிப்படையிலேயே பொதுத் தேர்வு முடிவுகள் வெளி யிட ப்பட்டுள்ளன. தனித் தேர்வர்களுக்குத் தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

கொரோனா நோய்த் தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலும், அதனால் பிறப்பிக்கப் பட்டுள்ள ஊடரங்கு காரணமாகவும் மாணவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சென்று தேர்வு எழுதுவது இயலாத காரியமாகும், இதனால் கொரோனா நோய்த் தொற்று அதிக ரிக்க வாய்ப்பு உள்ளது. கொரோனாவிற்குப் பிறகு தேர்வுகளை நடத்தினால் பள்ளியில் படித்துத் தேர்வு பெற்றவர்கள் அனைவரும் 11ஆம் வகுப்புகளில் சேர்ந்து படிக்கத் தயாராக இருப்பார்கள். இந்நிலையில் தனித் தேர்வர்கள் தேர்வு எழுதி வெற்றி பெற்றாலும், அவர்கள் 11ஆம் வகுப்பு களில் சேர முயலும்போது அவர்கள் விரும்பும் பாடப் பிரிவு கிடைக்காமல் சிரமப்பட வேண்டி யிருக்கும். எனவே, பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அனைவரும் தேர்ச்சி என அறிவித்து அவர்கள் மற்றவர்களைப் போல 11ஆம் வகுப்பில் சேர்ந்து பயில நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.