இ-பாஸ் செயல்முறையை ரத்து செய்ய வேண்டுமென்கிறார் திருநாவுக்கரசர்

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் மூலம் அனுமதி பெறவேண்டும் என்கிற இ-பாஸ் செயல்முறை இந்தியா முழுவதும் மத்திய அரசால் நீக்கப்பட்டுவிட்டது. தமிழ் நாட்டில் தொடரும் இந்த திட்டத்தால் பொது மக்களுக்கு கால தாமதம்இ இடையூறுகள்இ வீண் மன அழுத்தம் போன்ற தேவையில்லாத சிரமங்கள் ஏற்படு கின்றன. திருமணம்இ இறப்புஇ மருத்துவம் உள்ளிட்ட முக்கிய தேவைகளுக்காக செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். ஹோட்டல்கள்இ சுற்றுலா போன்றவை செயல்படாத நிலையில் அனாவசியமாக யாரும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல போவதில்லை. அது வும் சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களிலும் இன்னமும் தொடர்ந்து கட்டுப்படுத்தப் படாமல் பரவிவரும் கொரோனா தொற்றால் மக்கள் பீதியிலும் பயத்திலும் உள்ளனர். தேவை யில்லாத பயணங்களை அவசியமின்றி யாரும் குறிப்பாக குடும்பங்களோடு செய்யப் போவ தில்லை.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான  மு.க.ஸ்டாலின் அவர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் இது குறித்து தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இவற்றை கருத்தில் எடுத்துகொண்டு தமிழக அரசு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லுவதற்கான தடையை ரத்து செய்வதற்கு தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இவ்வாறு சு. திருநாவுக்கரசர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.