ஜோதிகா சூர்யா தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா கெஹ்டே, ஜெயராமன், ஜோசு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ், விது, கருணாகரன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ரெட்ரோ”. இக்கதை 1890 ஆண்டில் ஒரு அடிமை இனத்தின் வரலாற்று கதையாக தொடங்குகிறது. மேல்வர்க்கத்தினர் செய்யும் கொடுமைகளிலிருந்து மீட்பதற்கு அடிமை இனத்திலிருந்து வயிற்றில் சூலாயுத சின்னத்துடன் ஒரு மகன் பிறப்பான் என்றும் அக்குழந்தையால் சாதிபாகுபாடின்றி அனைவரும் சமமாக பதிக்கப்படுவார்கள் என்றும் ஒருவர் சாமியாடி சொல்கிறார். அதனால் மேல்வர்கத்தினர் அடிமைகளுக்குப் பிறந்த ஆண் குழந்தைகளை கொன்று வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக 1997 ல் சூர்யா அடிமை இனத்தில் பிறந்து வயிற்றில் சூலாயுத சின்னத்துடன் 2 வயது சிறுவனாக முனியாண்டி கோவிலில் அனாதையாக அழது கொண்டிருக்கிறார். அந்த கோவிலுக்கு வந்த மேல்வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவரால் தத்தெடுக்கப்பட்டு வளர்ந்து வருகிறார். சிறு வயது முதலே சூர்யாவுக்கு சிரிக்க தெரியாது. கொடூர கோபக்காரராக சண்டையிடும் ரவுடியாக மாறிவிடுகிறார். சூர்யா மேல்வர்க்கத்தினரிடமிருந்து தனது இனமக்களை எப்படி காப்பாற்றினார் என்பதுதான் கதை. இயக்குநர் சுப்புராஜின் சமத்துவ எண்ணங்களை தன் தோளில் சுமந்து நடித்திருக்கிறார் சூர்யா. படத்தின் முன்பகுதியில் நடித்த சூர்யாவுக்கும் பினபாதியில் அந்தமானில் நடிக்கும் சூர்யாவுக்கும் கிழக்கிற்கும் மேற்கிக்கிற்கும் உள்ள இடைவெளி தூரம் உள்ளது. அவ்வளவு மாறுபட்ட நடிப்பை கொடுத்து கடுமையாக உழைத்திருக்கிறார். கொடூரமான கதாபாத்திரத்தை நாசருக்கு கொடுத்துள்ளார் இயக்குநர். திருமண வீட்டில் பூஜாவின் ஆட்டம் ரசிகர்களை துள்ளாட்டம் போட வைக்கிறது. திருமண வீட்டில் சண்டையும் ஆட்டமும் இணைத்து புதுமையான முறையில் காட்சிப்படுத்தியுள்ளார்கள். அந்தமானின் அழகை அற்புதமாக ஒளிப்பதிவு செய்துள்ளார் சிரேயாஸ் கிருஷ்னா. சண்டை காட்சியும் நடனமும் படத்துக்கு பக்கபலமாக உதவியிருக்கிறது.
“ரெட்ரோ” திரைப்பட விமர்சனம்
