“எமன் கட்டளை” திரைப்பட விமர்சனம்

எஸ்.ஏ.கார்த்திகேயன் தயாரிப்பில் எஸ்.ராஜசேகர் இயக்கத்தில் அன்பு மயில்சாமி, சந்திரிகா, அர்ஜூனன், ஆர்.சுந்தரராஜன், சார்லி, டெல்லி கணேஷ், சங்கிலி முருகன், பவர் ஸ்டார் சீனிவாசன், நளினி, ஷகிலா, லதாராவ், கொட்டாசி, கராத்தே ராஜா, டி.பி.கஜேந்திரன், நெல்லை சிவா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “எமன் கட்டளை”. அன்பு மயில்சாமியின் ஒரு தவறான செயலால் ச்ந்திரிகாவின் திருமணம் இன்று போய்விடுகிறது. இதனால் மனம் வருந்தி அன்பு தற்கொலை செய்து கொள்கிறார். அவரது ஆன்மா எமலோகம் செல்கிறது. அங்கு எமதர்மராஜாவாகயிருக்கும் நெல்லை சிவா, அன்பிடம் உனது உயிரை உன் உடம்புக்குள் செலுத்துகிறேன். நீ மீண்டும் பூலோகம் சென்று சந்திரிகாவுக்கு 60 நாட்களுக்குள் திருமணம் செய்து வைக்க வேண்டும். இல்லையென்றால் உன் தலை சுக்கு நூறாக வெடித்துவிடும். அத்துடன் இந்த தேவ ரகசியத்தை நீ மற்றவர்களிடம் சொன்னாலும் உன் தலை வெடித்துவிடும் என்று எச்சரித்து அன்புவை பூலோகத்திற்கு அனுப்புகிறார். தனது உடலுடன் பூலோகம் வந்த அன்பு,  சந்திரிகாவுக்கு பல மாப்பிள்ளைகளை பார்க்கிறார். ஆனாலும் ஒன்றும் அமையவில்லை. எமதர்மராஜாவின் 60 நாள் கெடுவும் முடியபோகிறது. சந்திரிகாவுக்கு திருமணம் நடந்ததா?.  அல்லது அன்புவின் தலை வெடித்ததா? என்பதுதான் கதை. காலஞ்சென்ற நடிகர் மயில்சாமியின் மகன்தான் அன்பு. அவரின் தந்தை  மயில்சாமியின் குரல் அப்படியே அன்புக்கும் இருக்கிறது. கதாநாயகனுக்குரிய உடற்கட்டும் அழகும் இருக்கிறது. திரைவானில் மின்னுகின்ற நடச்த்திரமாக ஒளிவீசும் வாய்ப்பு இருக்கிறது. கதாபாத்திரத்தின் தன்மையை நன்றாக உள்வாக்கி நடித்திருக்கிறார். இசை என்ற பெயரில் ஓசையை கேட்கும் திரைப்படங்களுக்கு மத்தியில் இப்படத்தில் இசையை நன்றாக ரசிக்க முடிகிறது. சிநேகன், வி. சுப்பையன் ஆகியோரின் பாடல் வரிகளை தெளிவாக கேட்டு ரசிக்கும் இசையை அமைத்துள்ளார் என்.சசிகுமார். உள்ளத்திற்கு உற்சாகமான நடனத்தில் பின்னி பிடலை எடுக்கிறார் அன்பு. நடன் இயக்குநர் பாராட்டுதலுக்குரியவர். இதில் மனவருத்திற்குரிய விஷயம் என்னவென்றால், இப்படத்தில் நடித்த பல நடிகர்கள் எம்லோகத்தில் இருப்பதுதான். ஆனாலும் அவர்கள் நடித்திருக்கும் இப்படத்தின் மூலம் “எமன் கட்டளை”யாக பூலோகத்திலும் வாழ்கிறார்கள்.