நடிகை லிசி ஆண்டனி நடிக்கும் திரைப்படம் ‘குயிலி’

பி.எம்.பிலிம் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ. அருண்குமார் தயாரிப்பில் ப.முருகசாமி இயக்கத்தில் நடிகை லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில. நடித்திருக்கும் ‘குயிலி’ இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, மூத்த தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இத்திரைப்படத்தில் லிசி ஆண்டனி, ரவி சா, தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீண் ராஜ்ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜூ ஸ்மித. இசையமைத்திருக்கிறார். ஒரு தாயின் வைராக்கியம் மிக்க தொடர் வாழ்க்கை போராட்டத்தை எடுத்துக்காட்டும் விதமாகவும் மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை விநியோகஸ்தர் மோகன் வெளியிடுகிறார்.********

இயக்குநர் ப. முருகசாமி பேசுகையில், ”இயக்குநர் பாலாஜிசக்திவேலிடம் உதவியாளராக பணியாற்றும் போது தான் கார்ல்மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரைபற்றி வாசித்தேன். அதன் மூலமாக பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். அதன் பிறகு கூகை திரைப்பட இயக்கத்தில்இணைந்து கொண்டு திரைப்படக் கல்வியைக் கற்றேன். அதைவிட முக்கியமான அரசியல் கல்வியையும் கற்றேன். எளியமக்களின் வாழ்வியலையும் அங்கு தான் கற்றுக் கொண்டேன். அதன் மூலமாகத்தான் நல்லதொரு படைப்பை உருவாக்கமுடிந்தது. இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றியஇசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், உதவி இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் எனஅனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் கார்ல் மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர், பெரியார்ஆகியோரை பார்க்கவில்லை. இந்த மூவரும் ஒன்றாகஇருக்கும் எழுச்சித் தமிழர் தொல் திருமாவை பார்க்கிறேன். சிறிய வயதிலிருந்து அவருடைய போராட்டத்தையும், பேச்சையும் கேட்டு பார்த்து வளர்ந்தவன். பா ரஞ்சித்தைப்பார்த்தும் வளர்ந்திருக்கிறேன்,” என்றார். 

தயாரிப்பாளர் அருண் குமார் பேசுகையில், ”இங்கு சிறப்புவிருந்தினர்களாக வருகை தந்த அனைவரையும்வரவேற்கிறேன். இப்படம் சிறப்பாக உருவாவதற்கு உழைத்தபடக்குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  முதலில் என்னுடைய பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஏனெனில் ‘ஏமாற்றாதே’, ‘பொய் சொல்லாதே’, ‘திருடாதே’, ‘கடினமாக உழைத்தால் வெற்றி கிடைக்கும்’ என்றவிஷயங்களை சொல்லிக் கொடுத்து வளர்த்தனர். அவற்றைபின்பற்றி இப்படத் தயாரிப்பின் போது பல தடைகள், தாமதங்கள் ஏற்பட்டாலும் அனைத்தையும் கடந்துவெற்றிகரமாக நிறைவு செய்து இருக்கிறோம். இதற்காககடினமாக உழைத்த ‘குயிலி’ பட குழுவினர் அனைவருக்கும்மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்ததிரைப்படத்திற்காக முதலீடு செய்த நண்பர்களையும்வாழ்த்துகிறேன், வரவேற்கிறேன், நன்றி தெரிவிக்கிறேன். இந்தத் திரைப்படம் ஒரு அம்மாவின் வலியை பேசுகிறது. ஒருஅம்மா தன் மகனை வளர்ப்பதற்காக எவ்வளவு சவால்களைஎதிர்கொள்கிறார்கள்?எவ்வளவு போராட்டங்களைசந்திக்கிறார்கள்? அவர்கள் வாழ்க்கையில் இறுதிவரை எப்படிபோராடுகிறார்கள்? என்பதை இப்படம் விவரிக்கிறது. குயிலியாக நடித்த நடிகை லிசி ஆண்டனி உள்ளிட்டஇப்படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களுக்கும், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றிதெரிவித்துக் கொள்கிறேன். இது கமர்ஷியல் படமாக இல்லாமல் சமூகத்திற்கான படமாகஉருவாகி இருக்கிறது.‌ இதற்காக இயக்குநரைபாராட்டுகிறேன். இந்த திரைப்படம் வெளியான பிறகு படத்தைபார்த்தவர்களில் ஐந்து சதவீத மக்களாவது தங்களை திருத்திக்கொண்டால்.. அதுவே இப்படத்தின் வெற்றியாககருதுகிறோம்,” என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன்பேசுகையில், ”சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பழங்குடி இனமக்கள் மீதான ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துஇடதுசாரி இயக்கங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதால் இங்கு இந்நிகழ்ச்சிக்கு வர தாமதமானது. இப்படத்தின் பாடல் ஒன்றை மேடையிலேயே கேட்டேன். படம்எதைப் பற்றி வலியுறுத்துகிறது என்பதனை அண்ணன்ராஜனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.  இந்த கால சூழலில் சமூக பொறுப்புடன் மதுவிற்கு எதிராக ஒருதிரைப்படம் எடுக்கும் துணிச்சல் இயக்குநர் முருகசாமிக்கும், தயாரிப்பாளர் அருண்குமாருக்கும் இருப்பதை பாராட்டுகிறேன். நெஞ்சார வாழ்த்துகிறேன்.  வணிக நோக்கில் திரைப்படங்களை தயாரிக்க வேண்டும், அதில் வெற்றி பெற வேண்டும், அதில் லாபம் பெற வேண்டும்என்று எண்ணாமல் சமூகப் பொறுப்புணர்வோடு மக்களுக்குவழி காட்ட வேண்டும், இந்த குடியின் துன்பத்திலிருந்துமக்களை விடுவிக்க வேண்டும், விடுதலை பெற வேண்டும் என்றவேட்கையுடன் இளைய தலைமுறையினர் இந்த படைப்பைஉருவாக்கியிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது, என்பதை விட பெருமை அளிக்கிறது. இந்த குழுவினரைபார்த்து பெருமிதம் கொள்கிறேன். அவர்களை ஆரத் தழுவி என்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அண்மையில் மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடுஒன்றினை நாங்கள் நடத்தினோம் என்பது உங்கள்அனைவருக்கும் தெரியும். அது பேசு பொருளாகவும் மாறியது. கடும் விமர்சனங்களுக்கும் உள்ளானது. அண்ணன் ராஜன் பேசும்போது, ‘தேசிய அளவில் மதுவைஒழிக்க வேண்டும்’ என்றும் , இது தொடர்பாக திருமாவளவன்நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என்றும்நாடாளுமன்றத்தில் அவர் பேசியிருக்க கூடும் என்றும்குறிப்பிட்டார். அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை. நான் மக்களவையில் இது குறித்து பேசி இருக்கிறேன். அவர்என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வியப்பளிக்கிறது.  இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நான் பேசிய போதுகுறிப்பிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இதுதொடர்பாக அரசியல் ரீதியான விமர்சனத்தை முன் வைத்தார். நாம் அதை கடந்து சிந்திக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ளஇளைஞர்கள் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள நம்தேசத்து மக்கள் குடியினால் பாதிக்கப்படக்கூடாது என்றபரந்துபட்ட பார்வை நமக்கு உண்டு. ஆகவே மது ஒழிப்புகொள்கையை தேசிய கொள்கையாக இந்திய அரசுஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நான் நீண்ட காலமாகதொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.  மகாத்மா காந்தியை நாம் தேசிய தலைவராக ஏற்றுக்கொள்கிறோம். அவருடைய திருவுருவ படத்தை ரூபாய்நோட்டுகளில் அச்சடிக்கிறோம். அவருடைய கொள்கைகளில்முக்கியமானது மதுவிலக்கு. மகாத்மாவை தேசத் தந்தை என்றுஏற்றுக் கொண்டிருக்கும் நாம் அவருடைய உயிர் மூச்சானகொள்கையான மதுவிலக்கை பொருட்படுத்துவதில்லையே?  இதனை மாநிலங்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்று ஒன்றியஅரசு கண்டும் காணாமல் இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லஏனைய மாநில அரசுகளும் இதனை தங்களுடையவருவாய்க்கான வழியாகத்தான் பார்க்கிறது. யார் கெட்டுப்போனால் என்ன ? என்ற அலட்சியப்போக்குத்தான் நீடிக்கிறது. இது தொடர்பான கவலை பல பத்தாண்டுகளாக எனக்குஇருக்கிறது. இதை பல மேடைகளில் பேசி இருக்கிறேன். பலமாநாடுகளில் தீர்மானங்களாக நிறைவேற்றி இருக்கிறோம். இன்றைக்கு மது மட்டுமல்ல கஞ்சா உள்ளிட்ட போதைபொருள்களும் பகிரங்கமாக விற்பனை செய்யப்படுகிறன. நகர்ப்புறங்களில் மட்டுமே புழக்கத்தில் இருந்த போதைப்பொருள்கள்..தற்போது கிராமங்களிலும் ஊடுருவி இருக்கிறது.  இதற்காக ஒரு மாநாடு நடத்தி, அதில் இந்தியா முழுவதும் மதுஒழிப்பு தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும் எனஒன்றிய அரசினை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினோம். இது விமர்சனத்திற்கு உள்ளானது. அரசியல் ரீதியாகவும்விமர்சிக்கப்பட்டது.  இந்தியா முழுவதும் மது ஒழிக்கப்பட வேண்டும் போதைப்பொருள்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். குறிப்பிட்டசமூகத்தை சார்ந்தவர்கள் மட்டுமில்லை ஏராளமான இளையதலைமுறையினரும் குடிப் பழக்கத்திற்கு ஆளாகி தங்களதுவாழ்க்கையை பாழாக்கி கொள்கிறார்கள். குடும்பம்நடத்துவதற்கான ஆளுமையையே இழந்து விடுகிறார்கள். ஏதோ பெயரளவில் தாம்பத்திய உறவை கொண்டு, இரண்டுகுழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களைபராமரிக்கவும்… பாதுகாக்கவும்,.படிக்க வைக்கவும், எதிர்காலத்தை நல்ல முறையில் உருவாக்கவும், பொறுப்புணர்வு கொண்ட ஆளுமையாக அவர்கள் இல்லை. நிற்க முடியாமல் தடுமாறுகிறார்கள். அதிகாலையில் இருந்துபடுக்கைக்கு செல்லும் வரை போதையில் மிதக்கிறார்கள். அவ்வளவு குடும்ப பாரத்தையும் மனைவி சுமக்கிறாள். அதுஎவ்வளவு கொடிய துயரம் என்பதை களத்தில் நேரடியாகசென்று சந்தித்தால்தான் உணர முடியும்.  இந்த நாட்டை பீடித்திருக்கின்ற பேரவலங்களுள் இதுவும்ஒன்று. இந்தப் படத்தில் இடம்பெற்ற முதல் பாட்டை கேட்டேன். இந்தஅவலங்களை எல்லாம் வரிகளாக ஆக்கியிருக்கிறார்கள். இந்தப் பாடல் நம் நெஞ்சை ஆழமாக தொடுகிறது. மிக மிகஇன்றியமையாத ஒரு பாடல். எல்லா கிராமங்களிலும்கட்டாயமாக ஒலிக்க வேண்டிய பாடல். எல்லோரும்தங்களுடைய அலைபேசியில் வைத்திருக்க வேண்டிய பாடல். விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய பாடல். இசையும் மிகச்சிறப்பாக இருக்கிறது. வேட்டவலம் த. ராமமூர்த்தி இப்பாடலைஎழுதியிருக்கிறார். அவருக்கும் என் பாராட்டுக்கள். இந்த விஷயத்தில் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்புஇருக்கிறது. இதில் அரசியலை நுழைத்து மதிப்பீடு செய்யவேண்டியதில்லை.  தமிழக முதலமைச்சரிடத்தில் இது தொடர்பாக தனிப்பட்டமுறையில் பேசும் போது அவருக்கும் இது தொடர்பான கவலைஇருக்கிறது.‌ ஆனால் இது ஒரு சமூக கட்டமைப்பு, சிஸ்டம். அரசு அரசு சார்ந்த கட்டமைப்புகள் சில தருணங்களில்நம்முடைய விருப்பங்களை மீறி இயங்கக் கூடியவையாகஅமைந்து விடுகின்றன.‌  மக்களிடத்தில் பரந்துபட்ட அளவில் இதற்கான விழிப்புணர்வுதேவை. இன்று மதக் கலவரங்களும், வன்கொடுமைகளும்அதிகரிப்பதன் பின்னணியில் மதுவும் ஒரு காரணம் என்பதைநாம் காண முடிகிறது. ‘குயிலி’ படத்தால் என்ன சாதிக்க முடியும் என்று கருதாமல்விழிப்புணர்வை இன்னும் விரிவுபடுத்திக் கொண்டே செல்லவேண்டும். சில இளைஞர்களையாவது இத்தகையபாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும். துயரத்திற்கு ஆளாகாமல்தடுக்க முடியும். இளம் தலைமுறையினரை பாதுகாக்க முடியும். மதுக்கடைகளை மூடும் வரை ஒவ்வொரு மருத்துவமனையிலும்போதை மறுவாழ்வு மையம் இடம்பெற வேண்டும், இதுஎன்னுடைய கோரிக்கை. இதனை தமிழக முதலமைச்சரிடமும்தெரிவித்து இருக்கிறேன். அனைத்து மருத்துவமனைகளிலும்உளவியல் ஆலோசனை மையம் இடம்பெற வேண்டும். இதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்களை பணியமர்த்தவேண்டும்.  மதுப்பழக்கம் ஒரு தனி மனிதனை மட்டும் பாதிப்பதில்லை. சமூகத்தையே பாதிக்கிறது.‌ எனவே மது மற்றும்போதைப்பொருள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். பிறகு முற்றாகஒழிக்கப்பட வேண்டும்,’ என்றார்.