மாநில அரசுகளின் ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கும் ஒன்றிய அரசே  மாணவர் சேர்க்கையை நடத்த முயல்வது கடும் கண்டனத்திற்குரியது – டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர், டாக்டர் ஜி .ஆர்.இரவீந்திரநாத் இன்று சென்னையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விடுத்துள்ள , ஊடகங்களுக்கான செய்தி.

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்கள் உட்பட, நாடு முழுவதும் உள்ள நூறுவிழுக்காடு இளநிலை மருத்துவக் கல்வி இடங்களுக்கும்ஒன்றிய அரசேமருத்துவக் கல்வி கலந்தாய்வு  குழு மூலம்கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்த முயல்கிறது. இதற்காக அறிவிப்பை  ஒன்றிய அரசுஅரசிதழில் வெளியிட்டுள்ளது.  இது மாநில உரிமைகளுக்கு எதிரானது. மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் மாநில அரசுகளின்உரிமையை பறிக்கும் செயலாகும்.  ஏற்கனவே, நீட் நுழைவுத் தேர்வு மூலம் மாநில உரிமைகளை ஒன்றிய அரசு பறித்துவிட்டது.  ஏற்கனவே, 2017 முதல் DM மற்றும் MCh போன்ற உயர்சிறப்பு மருத்துவக் கல்வியில் 100 விழுக்காடுஇடங்களுக்கும், மாணவர் சேர்க்கை உரிமையை ஒன்றிய அரசு மாநிலங்களிடமிருந்து பறித்துக்கொண்டுவிட்டது.  தற்பொழுது ,நெக்ஸ்ட் (NEXT) என்ற தேர்வு மூலமும், ஒன்றிய அரசே 100 விழுக்காடு இடங்களுக்கும்மாணவர் சேர்க்கையை நடத்துவதின்  மூலமும் ,மாநில  உரிமைகளை முற்றாகப் பறிக்கிறது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீடு, அருந்ததியர் மற்றும் முஸ்லீம் உள்ஒதுக்கீடு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 % இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.  அதே போல் தமிழகத்தில் ஒவ்வொரு அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் கடைபிடிக்கப்படும் மேற்கண்டஇட ஒதுக்கீடுகளும் பாதிக்கப்படலாம்.  மேலும்,  இட ஒதுக்கீடு தொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் எதுவும் குறிப்பிடப்பட வில்லைஎன்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  ஒவ்வொரு மாநிலத்திலும் தனியார் மற்றும் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்கள் ,அம் மாநிலஅரசுகளுக்கு வழங்கும் இடங்களும் பாதிக்கப்படும்.  தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாடு அரசுக்கு வழங்கும் 65 விழுக்காடுஇடங்களும் கிட்டாமல் போகலாம்.அந்த இடங்களில் 69% இட ஒதுக்கீடும், அரசுப் பள்ளிமாணவர்களுக்குமான 7.5 % இட ஒதுக்கீடும் ,இதர உள் ஒதுக்கீடுகளும் பாதிக்கப்படும்.

ஒன்றிய அரசின் இம்முடிவு, மாநில அரசுகளின் இடங்களுக்கு மாநில அரசும், ஒன்றிய அரசின்இடங்களுக்கு ஒன்றிய அரசும் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்ற,தேசிய மருத்துவ ஆணையத்தின் சட்டப் பிரிவு  (NMC act  – 2019) Chapter IV, 14(3) க்கு எதிரானது.  எனவே , ஒன்றிய அரசு 100%  இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடத்தும் முடிவை திரும்பப் பெறவேண்டும்.  அகில இந்தியத் தொகுப்பு (All India Quota ) இடங்கள் ,பல்வேறு பிரச்சனைகளுக்கும், மாணவர்சேர்க்கை காலதாமதமாவதற்கும் காரணமாகிறது. மாநில உரிமைகளுக்கும் எதிராக உள்ளது. எனவே, அகில இந்தியத் தொகுப்பு முறையை ரத்து செய்ய வேண்டும்.  இளநிலை,முதுநிலை,உயர்சிறப்பு மருத்துவ இடங்களை அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்குவதைமுழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு மாநில அரசும், மத்திய அரசின்கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு மத்திய அரசும் மட்டுமே , இறுதி கட்டம் வரை, கடைசிஇடம் வரை  மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும்.  தனியார் மருத்துவக் கல்லூரிகள் நேரடியாக மாணவர் சேர்க்கையை நடத்திட எக்காரணம் கொண்டும்அனுமதிக்கக் கூடாது.  பல்வேறு முறைகேடுகளுக்கு வழி வகுக்கும் , தற்போதைய மாப் அப் (mop up counselling ) மற்றும்ஸ்ட்ரே ( stray counselling) கலந்தாய்விற்கு ,தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதிவழங்கிடக் கூடாது.  எம்.பி.பி.எஸ் படிப்பில் முதலாமாண்டு தேர்வை 4 முயற்சிகளில் ( Four attempts) முடிக்க வேண்டும், எம்.பி.பி.எஸ் படிப்பை 9 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள, புதியவிதிமுறைகள்  பழிவாங்கும் போக்கிற்கு வழிவகுக்கும். சமூக நீதிக்கு எதிராக அமையும்.

நவீன அறிவியல் மருத்துவத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளையும் ஒன்றிய அரசுமேற்கொள்கிறது.  ஒரே தேசம், ஒரே மருத்துவ முறை, ஒரே மருத்துவக் கல்விச் சந்தைஎன்ற தனது திட்டத்தையும், மருத்துவக் கல்வியையும், மருத்துவத்தையும்இந்துத்துவ மயமாக்க வேண்டும்”  என்ற  மறைமுகத்திட்டத்தையும் ஒன்றிய அரசு செயல்படுகிறது. இப்பிரச்சனைகள் குறித்து விவாதித்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க அனைத்துகட்சி மற்றும் அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டத்தை கூட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் அவர்கள் கூட்டிட வேண்டும்.  அனைத்து மாநில முதல்வர்களுக்கும்  இப்பிரச்சனை குறித்து கடிதம் எழுதிட வேண்டும்.

# சென்னை பாரிமுனை பேருந்து நிலையம் அருகில் உள்ள,சென்னை  மருத்துவக் கல்லூரி முதுநிலைமருத்துவ மாணவர் விடுதியையும் ,விடுதி உள்ள இடத்தை ,மருத்துவத் துறை அல்லாத வேறுத் துறைபயன்பாட்டுக்கு மாற்றுவதை கைவிட வேண்டும்.

# அதே இடத்தில், MMC முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு புதிய விடுதியை கட்டித்தர வேண்டும்.

இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில்சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச்செயலாளர் டாக்டர் .ஆர்.சாந்திதமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர்,முதுநிலை மருத்துவ மாணவர் ,டாக்டர் எம். கீர்த்திவர்மன் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர் எம். அஜய் முகர்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர்