“மார்க்கன்” திரைப்பட விமர்சனம்

பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் லியோ ஜான்பவுல் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஜய் தீசன், மகாநதி சங்கர், சமுத்திரகனி, ராமச்சந்திரன், பிரிஜிடா, தீப்ஷிகா, அர்ச்சனா, கனிமொழி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மார்க்கன்”. சென்னையில் பிறரை துன்புறுத்தி    கொலை செய்வத்தில் சந்தோஷமடையும் மனிதன் (சைக்கோ) ஒருவன் ஒரு இளம் பெண்ணின் உடலில் ஊசி மூலம் ரசாயணத்தை செலுத்தி கொலை செய்கிறான். அவன் யார் என்பதை கண்டுபிடிக்க மும்பையிலிருந்து துப்பறியும் அதிகாரியான விஜய் ஆண்டனி சென்னைக்கு வருகிறார். சென்னையில் சில அதிசயங்களை செய்துகாட்டும் அஜய்தீசனை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரிக்கிறார். அந்த நேரத்தில் மற்றும் ஒரு பெண் ரசாயண ஊசி மூலம் கொலை செய்யப்படுகிறாள். அதனால் அஜய்தீசன் கொலையாளி இல்லை என்பது தெரியவருகிறது. ஆனால் கொலையாளியை கண்டுபிடிக்க அஜய்தீசனின் தனித்திறைமைகள் தனக்கு தேவைப்படுமென்பதால் தன்னோடு வைத்துக் கொள்கிறார் விஜய் ஆண்டனி. கொலையாளி யார்? அஜய்தீசன் யார்? விசித்திரமான நிகழ்வுகளை எப்படி அஜய்தீசனினால் நடத்த முடிகிறது?  என்பதை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதை. இப்படத்தில் துப்பறியும் அதிகாரியாகவே விஜய் ஆண்டனி வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். துப்பறியும்போது அவர் கொடுக்கும் உடல் மொழியும் சாயலும் பிரமிக்க வைக்கிறது. தன்க்கே உரிய அசால்ட்டான சாயலை வெளிப்படுத்துவதை ரசிக்க முடிகிறது. அவருக்கு ஈடுகொடுத்து அஜய்தீசனும் நடிப்பில் அசத்தியுள்ளார். சமுத்திரக்கனி, பிரிகிடா, மகாநதி சங்கர், ராமச்சந்திரன், தீப்ஷிகா, அர்ச்சனா, கனிமொழி ஆகிய அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து தஙகளது பங்களிபை கொடுத்து படத்துக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்கள். சில காட்சிகளில் பார்வையாளர்களுக்கு ஏற்படும் சோர்வை, விஜய் ஆண்டனியின் பின்னணி இசை மறக்கச் செய்கிறது. ரசித்து கேட்கும்படியான சந்தத்தில் பாட்டுகளுக்கு மெட்டு போட்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. துப்பறிதலுக்கு ஏற்றவகையில் எஸ்.யுவாவின் கேமிராவும் பயணித்திருக்கிறது. கொலையாளி யார்? என்பதை படத்தின் முன்பாதியிலேயே பார்வையாளர்கள் யூகிக்க முடிந்தாலும், கொலையாளி யார் என்பதை உச்சக்கட்ட காட்சிவரை விறுவிறுப்பாகவும் பல இடங்களில் அதிர்வூட்டும் வகையிலும் திரைக்கதையை நகர்த்தியிருப்பது இயக்குநர் லியோ ஜான்பவுலின் த்னித்திறமையை திரையில் காணமுடிகிறது. ஒரு முழுநீள துப்பறியும் நாவலை படித்து முடித்த உணர்வோடு பாரவையாளர்கள் திரையரங்கைவிட்டு செல்லலாம்.