செம்பிரியோ பிக்சர்ஸ் சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் பொழுதுபோக்க் படமாக உருவாகியுள்ள படம் “பாம்”. வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டக்காட்சி வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் இயக்குநர் ரா பார்த்திபன் பேசியதாவது: பாம் படத்தை பற்றி என்ன பேசுவது என நிறைய யோசித்தேன். முதலில் வாயு பகவானை வணங்கித் தொடங்குவோம். இந்த மாதிரி கதையை டைட்டிலை தேர்ந்தெடுக்கனும் என்றால் இயக்குநர் விஷால் வெங்கட் எவ்வளவு பெரிய குசும்பனாக இருக்க வேண்டும், இதைத் தயாரிக்க வேண்டுமென்றால் தயாரிப்பாளர் அதைவிட எவ்வளவு பெரிய குசும்பனாக இருக்க வேண்டும். ஆங்கில படங்களில் தான் இது மாதிரி பார்த்திருப்போம். ஆனால் அதைத் தமிழ் சினிமாவில் காட்டுவது சவாலான விஷயம், அதை இந்தப்படக்குழு சாதித்துள்ளது.*****
சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் எப்போதும் கண்டென்ட் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பார். இந்த கண்டென்ட் அவருக்கு பிடித்திருக்கிறது. இமான் ஏ பி சி செண்டர் மட்டுமில்லை டி செண்டரையும் கவர்ந்து விடுவார், அதனால் தான் அவர் டி. இமான். தயாரிப்பாளர் சுகுமார் இல்லை சதா தான் – ஆம், சதா. சுதாவைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருப்பார். அதனால் சுதா இல்லை சதா தான் தயாரிப்பாளர். நான் எப்போதும் ஹீரோயின் பார்த்து தான் படம் செய்ய ஆசைப்படுவேன். ஆனால் அர்ஜூன் தாஸைப் பார்த்தால் ஹீரோவை மையமாக வைத்துப் படமெடுக்கத் தோன்றுகிறது. ஷிவாத்மிகாவை சின்ன வயதிலிருந்து பார்த்து வருகிறேன் – நல்ல நடிகை. தயாரிப்பாளருக்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையட்டும் வாழ்த்துக்கள்.
இயக்குநர் விஷால் வெங்கட் … GEMBRIO PICTURES சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் இருவருக்கும் பெரிய நன்றி. ஒரு ஐடியா மேல் நம்பிக்கை வைத்து வாய்ப்பளிப்பது மிகப்பெரிய விஷயம், என்னை நம்பி இன்று வரை ஆதரவாக இருக்கிறார்கள் நன்றி. அர்ஜூன் தாஸுக்கு இந்தக் கதை சொன்னேன், அவர் என்னை நம்பியதற்கு நன்றி. கதை எழுதியது முதல் ஷிவாத்மிகா தான் என் மைண்டில் இருந்தார், சிறப்பாக நடித்து தந்ததற்கு நன்றி. காளிவெங்கட் சாரிடம் கதை சொன்ன போது அவர் நடிப்பாரா எனச் சந்தேகம் இருந்தது. படம் முழுக்க பிணமாக நடிக்க வேண்டும், மூச்சு விடக்கூடாது – ஆனால் அசத்தியிருக்கிறார். சிங்கம்புலி சாரை நிறையக் கஷ்டப்படுத்தியுள்ளோம், சகித்துக்கொண்டதற்கு நன்றி. நாசர் சார் என் படத்தில் ஒரு ஃப்ரேமிலாவது இருக்க வேண்டும் என ஆசைப்படுவேன், அதே போல் தான் அபிராமி மேடமும். இருவருக்கும் நன்றி. ராஜ்குமார் – கேமரா பற்றி எதுவுமே தெரியாத ஆள்; நான் இயக்கம் என்றால் என்னவென்று தெரியாத ஆள். ஆனால் நாங்கள் படித்து இப்போது இந்த மேடையில் ஒளிப்பதிவாளராக, இயக்குநராக இருக்கிறோம் – மகிழ்ச்சி. இப்படத்தில் எனக்காக உழைத்துத் தந்த அனைவருக்கும் நன்றி. செப்டம்பர் 12 இந்தப்படம் திரைக்கு வருகிறது. உங்கள் எல்லோருக்கும் இந்தப்படம் பிடிக்குமென நம்புகிறேன். ஆதரவு தாருங்கள். நன்றி. அர்ஜூன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர், அபிராமி, ரமேஷ் திலக், பால சரவணன்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்: இயக்கம் – விஷால் வெங்கட் தயாரிப்பு – சுதா சுகுமார் இசை – டி. இமான் கதை & திரைக்கதை – மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரிகிரீசன், விஷால் வெங்கட் வசனம் – மகிழ்நன் BM ஒளிப்பதிவு – P.M. ராஜ்குமார் படத்தொகுப்பு – G.K. பிரசன்னா கலை இயக்கம் – மனோஜ் குமார் உடை வடிவமைப்பு – பிரியா ஹரி, பிரியா கரண் நடன அமைப்பு – அப்ஸர் சண்டைப்பயிற்சி – முகேஷ் மக்கள் தொடர்பு – சதீஸ் (AIM) நிர்வாகத் தயாரிப்பாளர் – D. சரவண குமார்