ஜெயபாரதி ரங்கராஜ் தயாரிப்பில் ரங்கராஜ் இயக்கத்தில், ரங்கராஜ், ஸ்ருதி நாராயணன், நன்சி, டில்லி கணேஷ், சாய் தீபா, பிர்லா பொஸ், ஶ்ரீலேகா, அறந்தாங்கி நிஷா ஆகியோரின் நடிபில் வெளிவந்திருக்கும் படம் “கட்ஸ்”. ரஙக்ராஜ் பிறக்கும் போது அவரது தந்தையை சில மர்ம நார்கள் கொலை செய்கிறார்கள். ரங்கராஜ் சிறுவயதடைந்ததும் அவரது அம்மாவையும் அந்த மர்ம நபர்கள் கொலை செய்கிறார்கள். சிறுவயதிலேயே அனாதையாக்கபட்ட ரங்கராஜ் வளர்ந்து கஷ்டப்பட்டு படித்து பெரியவனாகி காவல்த்துறை ஆய்வளராகவும் பணியில் அமர்கிறார். அவருக்கு திருமணம் நடக்கிறது. ஒரு குழந்தைக்கும் தந்தையாகுகிறார். குடும்பத்துடன் குதுகலமாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது அவரது மனைவியும் கொலை செய்கிறர்கள். இதனால் அவரின் வாழ்க்கைப்பாதையே கரடுமுரடாகிறது. இந்நிலையில் அவரது மனைவியை கொலை செய்தது யார் என்று தெரிந்து கொள்கிறார் ரங்கராஜ். தெரிந்தபின் அவர் என்ன செய்தார்? ஏன் மனைவியை கொலை செய்தார்கள்? என்பதை தந்தை கொலை செய்யப்பட்ட காரணத்தோடு இணைத்து பின்னப்பட்ட கதைதான் “கட்ஸ்”. தந்தை, மகன் என்ற இரண்டு கதாபாத்திரத்திலும் ரங்கராஜ் நடித்து அசத்தியிருக்கிறார். விவசாயியான அப்பா கதாபாத்திரத்திற்கும் காவல்த்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்திற்கும் உள்ள வேறுபட்ட நடிப்பை துல்லியமாக திரையில் காட்டி நடித்து பார்வையாளர்களின் பாராட்டை வெகுவாக பெற்றுள்ளார். அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரங்கராஜுவுக்கு மனைவியாக ஸ்ருதி நாராயணன் நடித்து த்கன் உழைப்பை திரையில் கொட்டியிருக்கிறார். எந்த காட்சியிலும் குறைவில்லாமல் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார் ஸ்ருதி நாராயணன். ஆய்வாளர் ரங்கராஜின் மனைவியாக் நடித்திருக்கும் நான்ஸியும் ஸ்ருதி நாராயணனுக்கு இணையாக சொல்லப்போனால் இருவரும் ஒருவருக்கு ஒருவர் போட்டிப் போட்டு நடிக்கிறார்கள். திரைக்கதைக்கு தகுந்தாற்போல் தாளம் போட்டிருக்கிறார் இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ர்ங்கிளின். மனோஜின் ஒளிப்பதிவு கண்ணுக்கு விருந்து. ரஞ்சித்தின் படத்தொகுப்பு திரைக்கதையை நேர்கோட்டில் பயணிக்க வைக்கிறது. டில்லி கணேஷ், சாய் தீபா, பிர்லா பொஸ், ஶ்ரீலேகா, அறந்தாங்கி நிஷா ஆகிய அனைவரும் அவரவரின் கதாபாத்த்ரைத்தை நன்றாம உள்வாங்கி அற்புதமான் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்க்ள்.
“கட்ஸ்” திரைப்பட விமர்சனம்
