இசக்கி கார்வண்ணன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் “பரமசிவன் பாத்திமா”. இப்படத்தில் விமல், சாயாதேவி, எம்.எஸ்.பாஸ்கர், இசக்கி கார்வண்ணன், சுகமார், கூல்சுரேஷ், அருள்தாஸ், ஸ்ரீரஞ்சனி, மனோஜ்குமார், ஆதிரா, சேஷ்விதா, விமல்ராஜ், மகேந்திரன், காதல் சுகுமார், ஆறு பாலா, வீரசமர், களவாணி கலை மற்றும் பலர் நடித்துள்ளனர். திண்டுக்கல் மவட்டத்திலுள்ள ஒரு மலை கிராமத்தில் இந்துக்களும் கிறிஸ்த்துவர்களும் இஸ்லாமியர்களும் தனித்தனி பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள். பரமசிவன் என்ற கதாபாத்திரதில் நடித்திருக்கும் விமலும் பாத்திமா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாயாதேவியும் சில நபர்களை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்கிறார்கள். இவர்களை கண்டுபிடிக்க முடியாமல் காவல்த்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் இசக்கி கார்வண்ணன் திணறுகிறார். தொடர்ந்து கொலைகள் நடப்பதால் அவர்களை சுட்டுபிடிக்க அல்லது சுட்டுக் கொல்ல ஆட்சியர் ஆணை பிறப்பிக்கிறார். ஒரு கட்டத்தில் விமலும் சாயாதேவியும்தான் கொலைகாரர்கள் என்று தெரிந்து கொண்ட ஆய்வாளர் இசக்கி கார்வண்ணன் விமலையும் சாயாதேவியையும் உயிருடன் பிடிக்க பின் தொடர்ந்து செல்கிறார். ஆனால் விமலும் சாயாதேவியும் ஒரு பழைய ஓட்டு வீட்டுக்குள் சென்றுவிடுகிறார்கள். உள்ளே சென்ற அவர்கள் வெளியே வராத்தால் பொறுமை இழந்த இசக்கி கார்வண்ணன் அந்த வீட்டை குண்டு மழையால் துளைத்து எடுக்கிறார். அப்போது ஶ்ரீரஞ்சனி அவர்களை கொல்ல முடியாது ஏனென்றால் அவர்கள் மனிதர்கள் இல்லை. ஆன்மாக்கள் என்று சொல்கிறார். விமலும் சாயாதேவியும் எப்படி? எதற்காக? இறந்தார்கள். ஏன் மற்றவர்களை கொலை செய்கிறார்கள்? என்பதுதான் மீதிக்கதை. படத்தின் முன்பகுதி முடியும்போது இவர்கள் இருவரும் ஆவிகள் என்று தெரிந்துவிட்டதால் தங்களை கொன்றவர்களை பழிவாங்கத்தான் கொல்கிறார்கள் என்று பார்வையாளர்கள் யூகித்துவிடுகிறார்கள். அதனால் படத்தை ரசிக்க முடியவில்லை. விமலும் சாயாதேவியும் யார் என்பதை உச்சக்கட்ட காட்சியில் சொல்லியிருந்தால் படம் விறுவிறுப்பாக போயிருக்கும். அதாவது இடைவேளைவரை மூடியிருந்த உள்ளங்கையை, படத்தின் பின்பகுதியின் ஆரம்பத்திலேயே விரித்து விட்டார் இயக்குநர். அதனால் விறுவிறுப்பும் குறைந்துவிட்டது. விமலும் சாயாதேவியும் இப்படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். விமல் தமிழாசிரியராகவே படத்தில் வாழ்ந்திருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர் கிறிஸ்துவ பாதிரியராக திருநெல்வேலி தமிழில் பேசி அசத்தியிருக்கிறார். சாயாதேவி தமிழ் திரைவானில் மின்னுவதற்கு தகுதிபடைத்திருக்கிறார். ஒளிப்பதிவுக் இசையும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.
“பரமசிவன் பாத்திமா” திரைப்பட விமர்சனம்
