மல்லையன் தயாரிப்பில் சதாசிவம் சின்னராஜ் இயக்கத்தில் சதாசிவம் சின்னராஜ், சாய் தான்யா, பேரரசு, பிளாக் பாண்டி, 0ஆதவன், ஓ.ஏ.கே.சுந்தர், லொள்ளு சபா மனோகர், டி.கே.எஸ், செந்தி குமாரி ஆகியோரின் நடித்திருக்கும் படம் “இ.எம்.ஐ. (மாததவணை). சதாசிவம் சின்னராஜூம் சாய் தன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகள். சின்னராஜு ஒரு கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கிறார். இருவரும் வசதியாக வாழ ஆசைப்படுகிறார்கள். அதனால் மாத தவணை முறையில் கார் உள்பட வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் சம்பளத்தை கருத்தில் கொண்டு மாதத்தவணை திட்டத்தில் வாங்கிறார்கள். ஒருகட்டத்தில் சின்னராஜுவுக்கு வேலை இல்லாமல் போய்விடுகிறது. மாதச்சம்பளத்தை நம்பி வாங்கிய பொருடகளுக்கு தவணைத் தொகை கட்டியாக வேண்டும். தவணைத்தொகை கட்ட எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதுதான் கதை. வாழ்க்கையில் அகலக்கால் வைக்கக் கூடாது என்பதை அழகாக சித்தரித்திருக்கிறார் இயக்குநர் சதாசிவம் சின்னராஜ். பேராசைப்படுபவர்களுக்கு அழகான பாடம்தான் இ.எம்.ஐ. முதல் படத்திலேயே இயக்குநர் மற்றும் கதாநாயகன் என இரண்டு வேலைகளை செய்திருக்கும் சதாசிவம் சின்னராஜ், முதல் படம் என்ற அடையாளமே தெரியாத வகையில் நடித்திருக்கிறார். நேர்த்தியான நடிப்பை அசால்ட்டாக நடித்திருக்கிறார். சாய் தன்யாவுக்கு பெரிய அளவில் கதாபாத்திரத்தில் வாய்ப்பளிக்காத்து குறைதான் என்றாலுலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். சாய்தன்யாவுக்கு தந்தையாக நடித்திருக்கும் பிரபல இயக்குநர் பேர்ரசின் முத்திரையை படத்தில் காணமுடியவில்லை. பிளாக்பாண்டி ஆதவன் லொள்ளுசபா மனோகர், ஓ.ஏ.கே.சுந்தர் ஆகியோரின் நடிப்பு படத்துக்கு பெரும் பக்கபலமாக அமைந்திருக்கிறது. நகைச்சுவை காட்சிகளை ரசிக்கலாம்.
இ.எம்.ஐ. (மாதத் தவணை) திரைப்பட விமர்சனம்
