புதிய பிஐஎஸ் உரிமம் பெற்றவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி” சென்னையில் நடைபெற்றது

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகம், சென்னையில்  “மானக் சம்வாத் என்ற புதிய பிஐஎஸ் உரிமம் பெற்றவர்களுக்கான வழிகாட்டுதல்நிகழ்ச்சியை” நடத்தியது. இந்த நிகழ்ச்சியில், பிஐஎஸ் பற்றிய சுருக்கமான வழிகாட்டுதல் அமர்வும்  அதைத்தொடர்ந்து அறிமுகத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. இந்தத் தொகுப்பில் உரிமைதாரர்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் தகவல்கள் இடம்பெற்றன. அவை உரிமம் பெற்றவர்கள், தரம் மற்றும் பாதுகாப்பு நிலைகளில் நாட்டின் முதன்மையான நிறுவனத்துடன் இணைவதற்கு உதவியது. திட்டத்தின் போது புதிய உரிமம் பெற்றவர்களுக்கு அசல் உரிம ஆவணங்களும் வழங்கப்பட்டன. உரிமம் பெற்றவர்கள்பிஐஎஸ் அதிகாரிகளுடன் தகவல் பரிமாற்ற  வாய்ப்பையும் இந்த நிகழ்ச்சி வழங்கியது. சென்னை கிளை அலுவலகத்தின் மூத்த இயக்குநர் மற்றும் தலைவர்   ஜி. பவானி, மற்றும் இயக்குநர் முனிநாராயணா ஆகியோர் உணர்திறன் கூட்டத்தை இணைந்து நடத்தினர். உரிமம் பெற்றவர்கள் தரப்பில் இருந்து உயர் நிர்வாக அதிகாரி மற்றும் தரக் கட்டுப்பாட்டு பணியாளர்கள் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தனர். சுமார் 30 உரிமதாரர்கள்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.