எஸ்.ஜே.சூர்யா மீண்டும் இயக்குநராக களமிறங்கி இருக்கிறார். அவர் இயக்கி நடிக்கும், அவரது கனவுப்படமான “கில்லர்” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. நடிகராக இந்தியளவில் கலக்கி வரும் எஸ்.ஜே.சூர்யா இயக்குநராக எப்போது படம் தருவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், “கில்லர்” படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது. ஒபடத்க்தில் இந்திய பல மொழிகளில் நடித்து வரும் பிரபல நடிகை பிரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்கிறார். படம் குறித்து இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா குறிப்பிடும் போது, என்னுடைய கனவு இடமான ‘இந்தியாவுக்கே எம்.ஜி.ஆர்’ (கலைத்துறையில் மட்டும்) என்ற இடத்தை அடைவதற்கு, முதல் பட இயக்குநர் போல, முதல் பட நடிகன் போல மிக சிரத்தையோடு, உங்கள் துணையோடு களமிறங்கி இருக்கிறேன். “கில்லர்” எனது கனவுப்படம். சில வருடங்களாகவே எழுதி வந்தேன். இது மக்களை ‘குஷி’ படுத்த போற படம். இப் படத்தை தென்னிந்தியாவின் மிக பெரிய பட நிறுவனமான ஶ்ரீ கோகுலம் மூவிஸ் கோகுலம் கோபாலன் அவர்களோடு இணைந்து, ஏஞ்சல் ஸ்டூடியோஸ் பட நிறுவனம் மூலம் பான் இந்தியா படமாக பிரமாண்டமாக உருவாக்குவதில் பெருமைக் கொள்கிறேன்.. என்றார்.*******
இதன் படப்பிடிப்பு ஜீன் 27ம் தேதி பூஜையுடன் இனிதே துவங்கியது. ஐந்து மொழிகளில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பை இந்தியாவிலும், மேலும் சில முக்கியமான காட்சிகள் மெக்ஸிகோ நாட்டிலும் மடமாக்கப் படுகிறது. இப்படத்தின் நடிகர், நடிகையர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் அடுததுத்து வெளியாகும்.