“அனல் மழை” திரைப்படத்தின் இசை வெளியீடு

சாய் பொன்னியம்மன் மூவிஸ் தயாரிப்பில்,  இயக்குநர் அ அய்யனாரப்பன் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் “அனல் மழை”.  விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் கலந்துகொள்ள சென்னையில் நடை பெற்றது. இந்நிகழ்வில் கதாநாயகன் அப்துல் ஷரீப் பேசியதாவது:  “அத்தனை கலை உறவுகளுக்கும் எனது வணக்கங்கள், கலை மீதுள்ள ஆர்வத்தினால் கூத்து பட்டறை சேர்ந்து என்னுடைய கலையை வளர்த்து கொண்டேன், இதுவரை 15 படங்களில் துணை நடிகராக நடித்துள்ளேன், இந்த இடத்திற்கு நான் வர பல கஷ்டங்களை சந்தித்திருக்கிறேன், மேடை நாடகத்தில் இருந்து தான் பல நடிகர்களும் தலைவர்களும் உருவாக்கியுள்ளனர், அதே போல இந்த படத்தில் பணி புரிந்துள்ள அனைவரும், ஒரு வெற்றி பாதையை அடைய வேண்டும் அது நடக்கும் என நம்புகிறேன். எனக்கு வாய்பளித்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இருவருக்கும் நன்றி” என்றார்********

தயாரிப்பாளர் மோகன் பேசியதாவது,  என் அழைப்பை ஏற்று இங்கு வந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி, இந்தப்படத்தின் தலைப்பு பற்றி அனைவருக்கும் சந்தேகம் இருக்கும், படம் பார்த்து முடியும் போது அந்த அனல் மழை என்ன என்பது உங்களுக்கு புரியும், இங்கு இருக்கும் அனைவரின் உள்ளத்திலும் ஒரு அனல் இருந்து கொண்டே தான் இருக்கும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அனல் இருக்கும், அப்படி பட்ட ஒரு அனல் தான் இந்தப் படம், இந்தப் படம் பார்க்கும் 60 வயது 70 வயது உள்ள அனைவரும் தன் வாழ்வில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை நினைத்துக் கொள்வார்கள், பத்திரிக்கை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், எங்களை போன்ற தயாரிப்பாளர்களை காப்பது உங்கள் கடமை, தயாரிப்பாளர் இருந்தால் தான் பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும், புதிய இயக்குனர்கள் உருவாக வாய்ப்பு ஏற்படும், நான் எனக்காக மட்டும் பேசவில்லை, என்னை போன்றுள்ள அனைவருக்கும் சேர்த்து தான் பேசுகிறேன், இந்தப் படத்தை வெற்றி பெற செய்யவும், அனைவருக்கும் நன்றி.

இயக்குனர் அய்யனாரப்பன் பேசியதாவது, இந்த நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, இந்த மேடை ஏற எனக்கு 40 வருடங்கள் ஆகியது, பல படங்களில் பணி புரிந்திருக்கிறேன் , இப்போது முதன் முறையாக ஒரு படத்தை இயக்கியுள்ளேன் அதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மோகனுக்கு மிகவும் நன்றி, எனக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி, படத்தின் டிரெய்லர் பார்த்து படத்தின் கதையை புரிந்து கொள்ள முடியாது, படம் பார்த்து படத்தை பற்றி சொல்லுங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், சாதிக்க முயற்சிக்கும் அனைவருக்கும் வாய்ப்பளியுங்கள், எனக்கு வாய்ப்பளித்த மோகன் அவர்களுக்கு நன்றி.