“இருள் சூழும் இரவினிலே” நகைச்சுவை பேய் திரைப்படம் தயாராகிறது

சாய் பாபா பிக்சர்ஸ் தயாரிப்பில் புதிதாக உருவாகி வரும் திரைப்படத்திற்கு “இருள் சூழும் இரவினிலே ” என்று பெயரிட்டுள்ளனர். சிவராம், ரேகா கதாநாயகன் கதாநாயகியாக நடித்துள்ளனர். இரண்டாம் கதாநாயகியாக பூஜா அக்னிஹோத்ரி நடித்துள்ளார். சிவராம் “விருகம் ” மற்றும் “ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்டு டா ” படங்களை இயக்கி நாயகனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க பேய் நகைச்சுவையாக படமாக  உருவாக்கி உள்ளார். மக்களுக்கு நல்ல பொழுது போக்கான படமாக அமையும் என்றார் இயக்குனர் சிவா.  இத்திரைப்படத்தில் கதை,திரைக்கதை, வசனம்,பாடல்கள்,இயக்கம் அனைத்துமே சிவராம் தான்.******

கேமரா-அனில் கிருஷ்ணா சண்டை-வயலண்ட் வேலு இசை-விஷ்ணுவர்தன் எடிட்டிங் -ராஜேஷ் செளகான் தயாரிப்பு-சாய் பாபா பிக்சர்ஸ் மேலும் இத்திரைப்படம் நவம்பர் மாதம் வெளியீடாக திரைக்கு வருகிறது.