போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த குறும்படங்கள் பாடல்கள் வெளீயீடு

தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல்துறையும் போதைப்பொருட்களின் கடத்தல் மற்றும் சட்டவிரோத விற்பனையை மாநிலம் முழுவதும் அனைத்து நிலைகளிலும் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. போதைப்பொருள் சட்டங்களை கடுமையாக அமல்படுத்துவதோடுமட்டுமல்லாமல், பொதுமக்கள் குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கக்கப்பட்டுவருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சரின் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற தொலைநோக்குப் பார்வையை அடையும் முயற்சியின் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அமலாக்கப்பணியகம், மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த குறும்படங்கள் ரீல்ஸ் உருவாக்கும் போட்டி சென்னை மற்றும் அதைச்சுற்றியுள்ள கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்றவர்களுக்கு முதல் பரிசுரூ1,00,000/-, இரண்டாவது பரிசு ரூ. 50,000/-, மூன்றாம்பரிசு ரூ .25,000/- மற்றும் 20 பங்கேற்பாளர்களுக்கு தலா10,000/-ரூபாய் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்கள. வழங்கப்பட்டது. முனைவர். ஏ.அமல்ராஜ், இ.கா.ப கூடுதல் காவல்துறை இயக்குநர், அமலாக்கப்பணியகம்– குற்றப்புலனாய்வுத்துறை சென்னை, சி.பி.சி.ஐ.டி வளாகத்தில் உள்ள மாநாட்டு அரங்கில்நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டுச்சான்றிதழ்களைவழங்கினார்.

 இந்த நிகழ்ச்சியின் போது, தமிழ்நாடு முழுவதும்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கானவிழிப்புணர்வு குறும்படங்கள் / ரீல்ஸ் தயாரிப்புபோட்டிக்கான போஸ்டரை கூடுதல் காவல்துறைஇயக்குநர், EBCID வெளியிட்டார். குறும்படங்கள் / ரீல்களை dftn2025@gmail.com என்ற மின்னஞ்சல்முகவரி மூலம் சமர்ப்பிக்க கடைசி தேதி 30.04.2025 ஆகும். தமிழ்நாடு முழுவதும் சிறந்த 25 குறும்படங்கள் / ரீல்கள் தேர்ந்தெடுக்கப்படும் முதல் பரிசிற்குரூபாய்.1,00,000/-, 2வது பரிசிற்கு ரூபாய்.50,000/-, 3வது பரிசிற்குரூபாய்.25,000/- மற்றும் மீதமுள்ள முதல் 22 குறும்படங்கள் / ரீல்களுக்கு ரூ.10,000/- ரொக்கப் பரிசுவழங்கப்படும். முனைவர் .P.K. செந்தில்குமாரி, இ.கா.ப, காவல்துறைதலைவர், குற்றம், தி A. மயில்வாகனன், இ.கா.ப, காவல் கண்காணிப்பாளர், போதைப்பொருள்நுண்ணறிவுப் பிரிவு மற்றும் பிற காவல் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.