கஞ்சா கடத்திய குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

திண்டுக்கல் போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு காவல்துறையினர் 13.09.2017ம்தேதி வத்தலக்குண்டு வழி திண்டுக்கல் ரோடு, பேகம்பூர் சந்திப்பில், பொன்னாங்கண், ஜெயபாஸ்  என்பவர்களை சோதனை செய்த போது, சட்டவிரோதமாக வணிகநோக்கத்துடன் அரசால் தடை செய்யப்பட்டபோதைப் பொருளான 75 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற எதிரிகளை கஞ்சாவுடன் கைது செய்யதனர். இது தொடர்பாக திண்டுக்கல் போதைப்பொருள. நுண்ணறிவுப்பிரிவு  புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேற்படி வழக்கில் புலன் விசாரணை முடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கில்09.04.2025 ஆம் தேதியன்று நீதிபதி, பொன்னாங்கண் என்பவருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூபாய் 1,00,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் திறம்பட புலன்விசாரணை மேற்கொண்டு மற்றும் சாட்சிகளை உரிய நேரத்தில் ஆஐர் செய்து நீதிமன்ற விசாரணை முடித்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த புலன்விசாரணை அதிகாரிகள் மற்றம் ஆளிநர்களை காவல்துறை கூடுதல் இயக்குநர், அமலாக்கப்பணியகம், சென்னை, காவல்துறை தலைவர், குற்றம், காவல் கண்காணிப்பாளர், போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு ஆகியோர் பாராட்டினார்கள்.