“டி என் ஏ” திரைப்பட விமர்சனம்

ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அர்கர்வா முரளி, நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல் , ரமேஷ் திலக், சேத்தன், ரித்விகா, விஜி சந்திரசேகர், போஸ் வெங்கட் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “டி என் ஏ”. காதல் தோல்வியால் மது பழக்கத்திற்கு அடிமையாகி தந்தையின் வெறுப்புக்கு ஆளாகி திரிகிறார் அதர்வா முரளி. மறுபுறத்தில் நாயகி நிமிஷா சஜயன் தன் வெகுளித்தனமான பேச்சால் திருமணம் ஆகாமல் பெற்றோர்களின் கவலைக்கு ஆளாகியிருக்கிறார். போதைக்கு அடிமையானவர்களுக்காக நடத்தப்படும் மறுவாழ்வு இல்லத்தில் அதர்வாவை சேர்க்கிறார்கள். அங்கு அதர்வா யோகசன்ம் கற்று மது பழக்கத்திலிருந்து முற்றிலுமாக விடுபட்டு வீடு திரும்புகிறார். திரும்ணமாகமலிருக்கும் நிமிஷாவுக்கிம் அதர்வாவுக்கும் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். தம்பதிகள் இருவரும் மிகவும் சந்தோஷ்மாக வாழ்க்கையை நடத்துகிறார்கள். பிறகு நிமிஷா கருவுற்று மருத்துவமனைதில் சேர்க்கப்படுகிறார். அங்கு அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. குழந்தை வயிற்றிலிருந்து வெளியே வந்ததும் தொப்பில் கொடியை அறுத்துவிட்டு முதலில் தாய் நிமிஷாவுக்கு குழந்தையை காட்டுகிறார் பிரசவம் பார்த்த் மருத்துவர் ரித்விகா. குழந்தையை குளிப்பாட்டி எடுத்துவர செவிலியரிடம் கொடுத்து அனுப்புகிறார் ரித்விகா. குழந்தையை குளிப்பாட்டிவிட்டு வெளியே காத்திருக்கும் அதர்வாவிடமும் அவர்களது பெற்றோர்களிடம் குழந்தையை காட்டுகிறார் செவிலியர். அதன் பிறகு நிமிஷாவை பார்க்க அனைவரும் உள்ளே வருகிறார்கள். செவிலியும் குழந்தையை எடுத்துக்கொண்டு நிமிஷாவிடம் கொடுக்கிறார். குழந்தையை கையில் வாங்கிய நிமிஷா “இது யார் குழந்தை? என் குழந்தை எங்கே?” எனக் கேட்கிறார். இதுதான் நம் குழந்தை என்று அதர்வ்வா சொல்கிறார்? ஆனால், நம் குழந்தை இது இல்லை என்று நிமிஷா கூறுகிறார். சந்தேகத்தை நிவர்த்க்தி செய்ய அனு பரிசோதனை (டி.என்.ஏ. டெஸ்ட்) செய்கிறார்கள். பரிசோதணையில் அதர்வா – நிமிஷா குழந்தை இல்லை தெரிகிறது. அப்படியானால் அத்ர்வாவின் குழந்தை எங்கே? யார்? எதற்காக கடத்தினார்கள் என்பதுதான் கதை. காதல் தோல்வியையும், குடிகாரனின் தோற்றத்தையும், சந்தோஷத்தையும், ஆக்ரோஷத்தையும் மிக அருமையாக முகத்தில் காட்டி புதிய பரிணாமத்தோடு நடித்து அசத்தியிருக்கிறார் அதர்வா. பல இடங்களில் அவரின் தந்தை முரளியை காணமுடிகிறது. நீண்ட இடைவெளிக்குப்பின் திரைவானில் ஒரு அடம் இப்படத்தின் மூலம் அதர்வாவுக்கு கிடைத்திருக்கிறது. பல இடங்களில் பார்வையாளர்களின் மனதில் இடம் பிடிக்கிறார். இவருக்கிணையாக நிமிஷா சஜயனும் நடிப்பில் போட்டிபோடுகிறார்கள். தாய் பாசத்தின் தனித்தன்மையை நிமிஷா வெளிபடுத்தி நடித்திருப்பது “ஆஹா” என சொல்ல வைக்கிறது. நிமிஷா குப்பை தொட்டியில் குழந்தையை தேடும் காட்சி தாய்மார்களின் கண்ணில் நீரை வரவழைக்கும். ஒரு தாயாகவே ர்ஹிரையில் வாழந்திருக்கிறார் நிமிஷா சஜயன். மாப்பிள்ளை வீட்டார் நிமிஷாவை பெண் பார்க்கவரும் காட்சியில் ஒரு தாயின் தவிப்பை விஜி சந்திரசேகரிடம் காணமுடிகிறது. மருத்ஹ்துவராக வரும் ரித்திகாவுக்கு சில காட்சிகளே என்றாலும் அதை திறம்பட நடித்து கொடுத்திருக்கிறார். காவல்த்துறை உதவி ஆய்வாளாராக ந்டித்திருக்கும் பாலாஜி சக்திவேல் பார்வையாளர்களின் கவனத்தை தன்பக்கம் இழுத்துக் கொள்கிறார். வில்லத்தனத்திலும் காவல் நிலையத்தில் கைதியாக இருக்கும் காட்சியிலும போஸ்வெங்கடின் நடிப்பில் அவர் ஒரு இயக்குநர் என்பதை நிரூபித்திருக்கிறார். தத்ரூபமான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். பெற்றோர்களுக்கு இப்படத்தின் மூலம் ஒரு வாழ்க்கைப்பாடத்தை நடத்தியிருக்கிறார் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்.