ஶ்ரீலஹரி கிருஷ்ணாவின் கல்கி ஜெயந்தி விழா

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள மனுஜோதி ஆசிரமத்தில்  ஜுலை மாதம் 15 முதல் 22 வரை எட்டு தினங்கள் ஸ்ரீமந்நாராயணர் ஸ்ரீலஹரி கிருஷ்ணாவின் கல்கி ஜெயந்தி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அச்சமயம் கூட்டுப்பிரார்த்தனை, அனைத்து வேதங்களின் ஆராய்ச்சி, சிறார்களுக்கான நிகழ்ச்சிகள், யோகாப்பியாசம் மற்றும்  பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறுகிறது. இவ்வாண்டு நடக்கும்  இவ்விழாவில் ஒரு அங்கமாக சர்வ சமய மாநாடு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கூட்டம்  ஜுலை 20 ஞாயிறு அன்று நடைபெறுகிறது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும்படி  வி.ஜி.பி. குழுமத்தின் தலைவர் வி.ஜி. சந்தோஷத்த்கை மனுஜோதி ஆசிரம நிர்வாகிகள் பால் உப்பாஸ் நவராஜா மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.