மோகன் ராஜ் குடும்பத்திற்கு நடிகர் சிலம்பரசன் நிதியுதவி

பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ வேட்டுவம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகையில் நடைபெற்றது. இந்த படத்திற்கான சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டபோது காரில் இருந்து தாவி குதிக்கும்  காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த தருணத்தில் சண்டைப் பயிற்சி கலைஞரான எஸ். மோகன்ராஜ் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். அவரின் குடும்பத்திற்கு  நடிகர்  நிதியுதவி வழங்கியுள்ளார். இது தொடர்பாக திரையுலகினர் பேசுகையில், ”சிலம்பரசன் மறைந்த சண்டை பயிற்சி கலைஞர் எஸ் மோகன்ராஜுக்கு மட்டுமல்ல.. ஏராளமானவர்களுக்கு எந்தவித விளம்பரமும் இல்லாமல்… எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்.. ஏராளமான உதவிகளை செய்து வருகிறார்” என உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டனர். சிலம்பரசனின் இந்த செயல்.. சமூக வலைதளவாசிகளாலும் , ரசிகர்களாலும் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது.******