சமூக பிரச்சினையை சொல்லும் படம் “மீண்டும்”

ஹீரோ சினிமாஸ் நிறுவனம் சார்பில் சி.மண்கண்டன் தயாரித்துள்ள படம் தான் “மீண்டும்”. அஜீத் நடித்து மாபெரும் வெற்றிபெற்ற சிட்டிசன் மற்றும் சினேகா நடிப்பில் வெளிவந்து வெற்ற பெற்ற ஏ.பி.சி.டி. ஆகிய படங்களை இயக்கியவர் சரவணன் சுப்பையா. இவர் சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் படத்தை இயக்கி உள்ளார். படத்தைப் பற்றி சமூக பிரச்சனைக்கு வழிதேடும் நாயகனாக கதிரவன் நடித்துள்ளார். இதன் உண்மையை தேடிபோகும் நாயகனுக்கு குடும்பம், உறவு, வாழ்க்கை என்று வெவ்வேறு கோணங்களில் எதிர்பாராத சிக்கல்கள் உண்டாகிறது. இவைகளிலிருந்து நாயகன் மீண்டும் தன் சகஜ நிலைக்கு வந்தாரா? இல்லையா? என்பதை காதல், சென்டிமென்ட், ஆக்ஷன் என்று சரியான விகிதத்தில் கலந்து சொல்லும் படம்தான் “மீண்டும்” என்றார்.

“மீண்டும்” படம் மார்ச் மாதம் திரைக்கு வர உள்ளது. இதில் கதிரவன், சரவணன் சுப்பையா, அனேகா, பிரணவராயன், எஸ்.எஸ்.ஸ்டேலி, சுப்பிரமணியசிவா, யார்கண்ணன், கேபிள்சங்கர், களவாணி துரைசுதாகர், சுபாபாண்டியன், இந்துமதி மணிகண்டன், மோனிஷா, அனுராதா நாகராஜன் என பலரும் நடித்துள்ளார். ராஜாமுகமது படத்தொகுப்பையும், ஸ்ரீநிவாஸ் தேவாம்சம் ஒளிப்பதிவையும், வைரமுத்து பாடல்களையும், நரேன் பாலகுமார் இசையையும், சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சியையும், ராதிகா நடன பயிற்சியையும், மனுமொழியன் ராமதுரை கலையையும், நாகராஜன் தயாரிப்பு நிர்வாகத்தையும், கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தை சரவணன் சுப்பையாவும் கவனித்துள்ளனர். மக்கள் தொடர்பு: விஜயமுரளி. கிளாமர் சத்தியா.