மூளை வளர்ச்சியற்றவர்களுக்கு உணவளித்து தீபாவளியை கொண்டாட லட்சுமி அம்மா தனது பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்

பரமகுடி, நவ.13- தனது பக்தர்கள் உள்பட அனைத்து மக்களுக்கும் “சாந்தம் மக்கள் டெவலப்மெண்ட் பவுண்டேஷன்” சார்பில் அதன் நிறுவனரும் சிவயோகியுமான லட்சுமி அம்மாள் விடுத்துள்ள தீபாவளி நல்வாழ்த்துச் செய்தியில், “இந்த இனிமையான தீபாவளியை கொண்டாடுபவர்கள் தங்களது துன்பங்கள் துயரங்கள் நீங்க தங்களது மறைந்த முன்னோர்களுக்கு பலவகையான இனிப்புகள் பலகாரங்கள் உள்பட படையல் வைத்து சிறப்பாக கொண்டாடுகிறோம். இறைவன் உயிரனங்களை படைக்கும்போதே உண்ணுகின்ற உணவின் ருசியை உணரக்கூடியதாகவே படைக்கிறான். ஆனால் மூளை வளர்ச்சி இல்லாதவர்கள் தங்களது உணவுடன் எது கலந்தாலும் அதை அறியமாட்டார்கள். அதை அப்படியே சாப்பிட்டுவிடுவார்கள். அப்படி மூளை வளர்ச்சி இல்லாதவர்களை கவனிக்கின்றவர்களைத் தான் மனித உருவில் வந்த இறைவனாக கருதப்படுகிறார்கள். தீபாவளியை கொண்டாடுபவர்கள் மூளை வளர்ச்சியற்ற குழந்தைகளை கவனிக்கும் நிறுவனங்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டுகிறேன். மூளை வளர்ச்சியற்றவரக்ளுக்கு உடுக்க உடையும் உண்ண உணவும் கொடுத்து இந்த இனிய தீபாவளியை கொண்டாட வேண்டுகிறேன். இந்த தீபாவளியில் நீங்கள் எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்திட வாழ்த்துகிறேன்” இவ்வாறு தனது பக்தர்களுக்கு லட்சு அம்மா தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.