விஜய் மில்டன் இயக்கும் படத்தில் நடிகர் சுனில் இணைந்தார்

பல்வேறு கதாப்பாத்திரங்களிலும் திரைப்படத் துறைகளிலும் தனது பலதரப்பட்ட திறமைகளுக்குப் பெயர் பெற்ற நடிகர் சுனில், பல ஆண்டுகளாக திரைத்துறையில் பணி புரிந்த அனுபவத்தையும், மயக்கும் திரை ஆளுமையையும் இந்தத் திரைப்படத்தின் மூலம் கொண்டு வருகிறார். இந்தத் திரைப்படத்தில், சுனில் தனது இயல்பான வசீகரத்தன்மையுடன், எதிர்பாராத உணர்ச்சிப் பரிமாணங்களைக் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த வேடம், அவரது நடிப்பு பயணத்தில் ஒரு புதுமையான மாற்றத்தை ஏற்படுத்தி, ரசிகர்கள் இதுவரை பார்க்காத ஒரு தீவிரமான, பல பரிமாணங்கள் நிறைந்த, உணர்வுப்பூர்வமான சுனிலை காணும் வாய்ப்பை அளிக்கிறது. பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் சுனில் நடிக்கும் இப்படத்தை இயக்குகிறார்.*******

சுனிலை இந்தக் கதைக்காக  தேர்ந்தெடுத்தது குறித்து இயக்குநர் விஜய் மில்டன் கூறுகையில், “சுனில் வெறுமனே ரசிகர்களின் விருப்பமான நடிகர் மட்டும் அல்ல—அவர் ஆழமும், நுண்ணுணர்வும் கொண்ட ஒரு சிறந்த நடிகர். இந்தக் கதாபாத்திரம், அவர் இதுவரை செய்த எந்த வேடத்தையும் போல் அல்ல. இது இயல்பு, எதிர்மறைத்தன்மை மற்றும் சக மனிதர்களுக்குள்ள குணத்தை கொண்ட ஒரு கதாபாத்திரம். இந்தப் படத்தில், ரசிகர்கள் அவரை வேறொரு புதிய வகையில் ரசிப்பார்கள் என நம்புகிறேன்,” என்றார். இந்தப் படம் ஏற்கனவே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் நடிகர் ஆரி முன்னெப்போதும் இல்லாத காவலர் தோற்றத்தில் வலம் வருகிறார்; ராஜ் தருண் இந்த படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்; பரத் உணர்ச்சி பொங்கும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்; பால் டப்பா நடிப்புலகில் தனது முதல் படியை இந்தப் படத்தின் மூலம் எடுத்து வைக்கிறார் ; இப்போது பான் இந்தியா நடிகரான  சுனில், இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்.

விஜய் மில்டன் இயக்கும் படங்களின் வழக்கமான கதை சொல்லும் மரபினைத் தொடர்ந்து, சமூகத்திற்கு தேவையானதும், உணர்வுப்பூர்வமாக ஈர்க்கக்கூடியதுமான இந்த திரைப்படம், எதிர்பாராத திருப்பங்களும், மனதைக் கவரும் நடிப்புகளும் நிரம்பிய சினிமா அனுபவத்தை வழங்கவிருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் பெயர் ஜூன் 15 அன்று வெளியிடப்படும், மேலும் பல்வேறு நடிகர்கள் குறித்த அறிவிப்புகளும் அதனைத் தொடர்ந்து வெளியாகும்என்பதை ரஃப் நோட் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தெரியப்படுத்திக் கொள்கிறது. இந்த ஆரோக்கியமான படப்பணியின் பயணம் இனிதே ஆரம்பிக்கும் நிலையில் உள்ளது.