ஜெகநாதன் பரமசிவம் தயாரிப்பில் யு.அன்பு இயக்கத்தில் சண்முகப்பாண்டியன் விஜயகாந்த், கஸ்தூரி ராஜா, யாமினி சந்தர், முனிஷ்காந்த், கருடன் ராம், ரிஷி, வெங்கடேஷ், யூகி சேது, ஶ்ரீஜித் ரவி, அருள்தாஸ், லோகு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த்ஜ்ருக்கும்படம் “படைத்தைவன்”. சண்முகப்பாண்டியன் விஜயகாந்த் ஒரு குட்டியானையை சிறு வயதிலிருந்து வளர்த்து வருகிறார். அவரது அப்பா கஸ்தூரி ராஜா அந்த குட்டி யாணைக்கு “மணியன்” என்று பெயர் சூட்டி தனது மகனாகவே வளர்த்து வருகிறார். இப்போது அந்த யானை 25 வயதை அடைந்த யானையாக வளர்ந்து இருக்கிறது. கஸ்தூரி ராஜா தன் உறவினரிடம் கடன் பட்டிருக்கிறார். அந்த கடனை அடைப்பதற்காக யானியை கோவில் திருவிழாவுக்கும் திருமண வீட்டுக்கும் வாடைக்கு சென்றுவர முடிவு செய்கிறார் சண்முகப்பாண்டியன். அப்படி ஒரு திருமண வீட்டுக்கு யானையை கூட்டி சென்றபோது அந்த யானைக்கு ஒருவர் தர்பூசணி பழத்தில் மதம்பிடிக்கும் மருந்தை ஊசியின் மூலம் செலுத்தி சாப்பிட கொடுக்கிறார். பழத்தை சாப்பிட்ட யானைக்கு மதம் பிடிக்கிறது. கல்யாண வீட்டை துவசம் செய்கிறது. சண்முகப்பாண்டியனையும் தூக்கி வீசுகிறது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகின்றன. அதனால் அந்த யானையை வனத்துறையினர் பிடித்துச் சென்று விடுகிறார்கள். யானையை மீட்டுக் கொண்டுவர கஸ்தூரி ராஜாவும் சண்முகப்பாண்டியனும் சட்டரீதியாக முயற்சிகிறார்கள். ஆனால் முடியவில்லை. லஞ்சம் கொடுத்தும் பார்க்கிறார்கள் அப்படியும் முடியவில்லை. வனப்பதுகாப்பிலிருந்த யானை தப்யோடிவிட்டது என்று வனத்துறை ஆய்வாளர் சொல்லுகிறார். சண்முகப்பாண்டியனால் ஏன் யானையை அதிகாரிகளிடமிருந்து மீட்க முடியவில்லை? ஏன் யானை கடத்தப்படுகிறது? அந்த யானையை கண்டுபிடிப்பதுதான் கதை. இப்படத்தில் விஜயகாந்திதை அப்படியே நம் கண்முன் நிறுத்துகிறார் சண்முகப்பாண்டியன். கேப்டன் விஜயகாந்த் கரையோர கடல் அலைபோல சீரிப்பாய்வார். ஆனால் அவரது மகன் சண்முகப்பாண்டியனை நடுக்கடல் அலை போல ததும்ப வைத்திருக்கிறார் இயக்குநர் யு.அன்பு. சண்முகப்பாண்டியனின் உச்சக்கட்ட காட்சியின் ஆக்ரோஷத்தை படதின் ஆரம்பத்திலேயே காட்டியிருந்தால் கேப்டனின் ரசிகர்களுக்கு இன்னும் துள்ளாட்டமாக இருந்திருக்கும். தனது இரு கண்களையும் சண்முகப்பாண்டியனுக்கு கொடுத்து மறைந்திருக்கிறார் கேப்டன் விஜயகாந்த். இளையராஜாவின் பின்னணி இசையில் சண்டைக்காட்சிகள் திரையரங்கை அதிரச்செய்கிறது. இனிமையான பாடல்களை தந்து பார்வையாளர்களின் இதையத்தை தடவுகிறார் இளையராஜா. வறுமையிலும் தன்மானம் இழக்காத ஏழை குடிமகனாக வாழ்ந்திருக்கிறார் கஸ்தூரி ராஜா. அடர்ந்த காட்டுப்பகுதியில் ஒளிப்பதிவவாளர் சதிஷ்குமாரின் உழைப்பு பாராட்டத்தக்கது. யாமினி சந்தர், முனிஷ்காந்த், கருடன் ராம், ரிஷி, வெங்கடேஷ், யூகி சேது, ஶ்ரீஜித் ரவி, அருள்தாஸ், லோகு ஆகியோர் அவரவர்களின் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்கள். சண்முகப்பாண்டியன் விஜய்காந்துக்கு இப்படம் வெற்றியின் முதல் படிக்கட்டாக அமைந்திருக்கிறது.
“படைத்தலைவன்” சினிமா விமர்சனம்
