“சென்னை சிட்டி கேங்கர்ஸ்” திரைப்பட விமர்சனம்

பாபி பாலச்சந்திரன் தயாரிப்பில் விக்ரம் ராஜேஸ்வர், அருண் கேசவ் இயக்கத்தில் வைபவ், அதுல்யா ரவி, மணிகண்டா ராஜேஷ், ஆனந்தராஜ், இளவரசு, ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், சுனில் ரெட்டி, லிவிங்ஸ்டன், பிபின், ஷிஹான் ஹூசைனி, சூர்யா கணபதி, சாம்ஸ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “சென்னை சிட்டி கேங்கர்ஸ்”. ஹூசைனியும் லிவிங்ஸ்டனும் மிகப்பெரிய மோசடி பேர்வழிகள், தாதாக்கள். இவர்களிடம் வைபவும் மணிகண்டாவும் வேலைக்காரர்களாக இருக்கிறார்கள். லிவிங்ஸ்டன் மோசடியாக இன்சூரன்ஸ் பணம் பெறுவதற்காக தன் வீட்டிலிருக்கும் பணம் நகைகளை  வைபவிடமும் மணிகண்டாவிடமும்  கொடுத்து மறைத்து வைக்க சொல்லி அனுப்பிவிடுகிறார். பிறகு லிவிங்ஸ்டன் தனது வீட்டிலுள்ள பணம் நகைகளை கொள்ளயயர்கள் கொள்ளையடித்து விட்டார்கள் என காவல் நிலையத்தில் புகாரளித்து அதற்குரிய இன்சூரன்ஸ் பணத்தையும் மோசடியாக பெறுகிறார். லிவிங்கனிடமிருந்து வாங்கி வந்த பணத்தையும் நகைகளையும் வைபவ் தொலைத்து விடுகிறர். தொலைத்த பணத்தை எப்படி திருப்பி கொடுப்பது என்று வைபவ்வும் மணிகண்டாவும் யோசித்துக் கொண்டிருக்கும்போது, ரெடின் கிங்ஸ்லி அவர்களிடம். “எனது நண்பர்கள் நான்கு பேர் ஒரு வங்கியில் கொள்ளையடிக்கும்போது போலீசில் மாட்டிக் கொண்டு இப்போது சிறையில் இருக்கிறார்கள். நாளை விடுதலையாகி வருகிறார்கள். அவர்களோடு நீங்களும் சேர்ந்து வங்கியில் கொள்ளையடித்து உன் முதலாளியின் பணத்தை திருபி கொடுத்துவிடு” என்று யோசனை கூறுகிறார். சிறையிலிருந்து வெளியில் வரும் ஆனந்தராஜ், ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், சுனில் ரெட்டி ஆகிய நால்வருடன் வைபவும் மணிகண்டாவும் கூட்டு சேர்ந்து வங்கியை கொள்ளையடிக்க முடிவு செய்கிறார்கள். முடிவு செய்தபடி வங்கியை கொள்ளையடித்தார்களா?. லிங்ஸ்டனுக்கு பணம் திரும்ப கிடைத்ததா?. தாதாவான ஹூசைனி என்ன ஆனார்?. என்பதுதான் கதை. நகைச்சுவை நடிகர்களையெல்லம் ஒன்று சேர்த்து மெகா நகைச்சுவையான ஒரு படத்தை எடுக்க நினைத்திருக்கிறார் இயக்குநர்கள் விக்ரம் ராஜேஸ்வரரும் அருண் கேசவ்வும். நகைச்சுவை நடிகர்கள் அவரவர் பாணிகளில் நடித்திருந்தாலும் திரைக்கதையின் சிதைவால் படம் எடுபடவில்லை. வைபவ் தனது அமைதியான நடிப்பில் அசத்தியிருக்கிறார். துடிப்பான நடிப்புடன் ஆனந்த்ராஜை இளமையுடன் காணமுடிகிறது. அழகுக்காக வந்துபோகிறார் அதுல்யா ரவி. கலகலப்பாக படம் செல்கிறது.