மோகன் பாபு தயாரிப்பில், முகேஷ்குமார் சிங் இயக்கத்த்கில் விஷ்ணு மஞ்சு, மோகன்பாபு, பிரபாஸ், மோகன்லால், அக்ஷய்குமார், காஜல் அகர்வால், அர்பிட் ரங்கா, பரமானந்தம், சப்தகிரி, முகேஷ்ரிஷி, மதுபாலா, ஐஸ்வரியா பாஸ்கரன், பரஹ்மாஜி, ரகுபாபு, சிவா பாலாஜி, சம்பத்ராம், லவி பஜ்னி, பிரித்தி முகுந்தன், கொவ்சை, அதுரஸ் ரகு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கண்ணப்பா”. காளஹஸ்தி என்ற மலைப்பிரதேசத்தில் வேடுவர் இனமக்கள் 5 பிரிவுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். அதன் ஒரு பிரிவுக்கு தலைவராக சரத்குமார் இருக்கிறார். அவரது மகன் விஷ்ணுமஞ்சு, திண்ணன் என்ற பெயரில் சிறுவனாக இருக்கும்போது அவனது நண்பனை காளிக்கு நரபலி கொடுக்கிறார்கள். அதைப்பார்த்த திண்ணன் காளி சிலையை பார்த்து “இது ஒரு கல். இந்த கல் நரபலி கேட்குமா”? கல் பேசுமா”? என்று நாத்திகம் பேசிவிட்டு நாத்திகனாகவே வளர்ந்து 25 வயதை அடைகிறார் திண்ணன் என்ற கதாபாத்திரத்தில் விஷ்ணு மஞ்சு. அவருக்கு காதலியாக தெய்வபக்தி உடையவளான நெமிலி என்ற கதாபாத்திரத்தில் பிரித்தி முகுந்தன் நாத்திக கணவனுக்கு மனைவியாகிறார். சிவபக்தையான பிரித்தி நவராத்திரியன்று சிவபூஜையில் ஈடுபடுகிறார். அப்போது சிவலிங்கத்துக்கு படைத்திருந்த பாயசத்தை விஷ்ணு மஞ்சு எடுத்து குடிக்க முயலும்போது பாயசத்தை பிரித்தி கீழே தட்டிவிடுகிறார். “இன்று சிவராத்திரி இரவு முழுவதும் எதுவும் சாப்பிடாமல் பட்டினியாக இருக்க வேண்டும்” என்று கூறுகிறார். இதனால் கோபமடைந்த விஷ்ணுமஞ்சு “இன்று இரவுக்குள் ஒரு மானை வேட்டையாடி கொண்டு வருகிறேன். அதை சமைத்து கொடுக்க வேண்டும்” என்று கூறிவிட்டு வேட்டைக்கு செல்கிறார். ஆனால் வேட்டையில் ஒரு விலங்கினமும் கிடைக்காமல் கடைசியாக வாய்வு லிங்கம் இருக்கும் காளகஸ்திக்கு வருகிறார். அங்கு சிவலிங்கத்தை பார்த்து, “இன்று வேட்டை ஒன்றும் கிடைக்கவில்லை பசிக்கிறது சிவனே” என யதார்த்தனமாக கூறியதும் சிவனின் அருளால் ஆத்திகனாக மாறுகிறார். சிவலிங்கத்துக்கு முன் கூத்தாடுகிறார். இதை ம்காதேவ சாஸ்திரிகள் கதாபாத்திரத்தில் மோகன்பாபுவும், பிரித்தியும் பார்த்து பக்தி பரவசமடைகிறார்கள். விஷ்ணுமஞ்சு தன் வாயில் தண்ணீரை கொண்டுவந்து சிவலிங்கத்து மீது கொப்பளித்து குளிப்பாட்டுகிறார். மாமிசத்தை சமைத்து சிவலிங்கத்துக்கு சாப்பிட கொடுக்கிறார். அப்போது சிவலிங்கத்தில் சிவனின் இரு கண்களும் விழிக்கிறது. ஒரு கண்ணில் ரத்தம் வடிகிறது. அந்த கண்ணுக்குப்பதில் தன்னுடைய ஒரு கண்ணை அம்பால் குத்து எடுத்து சிவனின் கண் இருந்த இடத்தில் பொறுத்துகிறார். உடனே சிவனின் அடுத்த கண்ணிலும் ரத்தம் வடிகிறது. அந்த கண்ணுக்கு பதிலாக விஷ்ணுமஞ்சு தன்னுடைய அடுத்த கண்ணையும் குத்தி எடுத்து சிவனின் கண்ணில் பொறுத்தும்போது அடையாளத்துக்காக சிவனின் கண்மீது தன் கால் கட்டை விரலால் மிதித்து அந்த இடத்தில் தன்னுடைய கண்ணை பொறுத்துகிறார். உடனே சிவன் அவர் முன் தோன்றி “எனக்கு உன் கண்ணை கொடுத்ததால் இன்றுமுதல் திண்ணப்பனான நீ கண்ணப்பனாக வணங்கப்படுவாய்” என்று வரம் அளித்து தன்னோடு கண்ணப்பனை ஐக்கியமாக்கிக் கொள்கிறார். சிவனை வழிபட்ட 63 நாயன்மார்களில் கண்ணப்ப நாயனாரும் ஒருவர். இப்படத்தில் மகாபாரத காலத்தில் கண்ணப்பனாரை அர்ஜூன்ன் என்று காட்டுகிறார்கள். மோகன்லால் சிவனாக வந்து அவருக்கு உபதேசம் செய்கிறார். கண்ணப்பர், வேடுவர் குலத்தில் பிறந்தவர். வேடுவராக இருக்கும்போதுதான் சிவன் முக்தி கொடுத்தார். பொதுவாக தாழ்த்தப்பட்ட இறை நேசகர்கள் இறைவனால் முக்தி அடையும்போது அவர்களை தாழ்த்தப்பட்டவர்களாக அங்கிகரிக்க மாட்டார்கள். மாற்றாக அவர்களை உயர்சாதிக்காரர்களாக மாற்றித்தான் ஏற்றுக் கொள்வார்கள். நந்தனுக்கு தாழ்ந்த குலத்தவனாக இருகும்போதே இறையருள் கிடைத்தது. ஆனால் சிவாலயத்துக்குள் அழைத்து செல்லும்போது, நந்தனை அந்தணனாக்கித்தான் அழைத்து செல்வதை நந்தன் திரைப்படத்தில் காண்லாம். (சாமி கொடுத்தாலும் பூசாரி கொடுக்க மாட்டார் என்று சொல்லும் பழமொழிபோல). இந்த சூழ்ச்சி புரியாதவர்கள் தஞ்சாவூர் தலையாட்டி மொம்மையாகிவிடுகிறார்கள். அக்ஷ்யகுமார் சிவனாகவும் காஜல் அகர்வால் பார்வதியாகவும் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் அதை நிறைவாக செய்துள்ளார்கள். இப்படத்தில் காளஹஸ்தி என்ற வனப்பிரதேசத்தை நியூசிலாந்திலுள்ள காடுகளில் படமாக்கியுள்ளார்கள். அவ்வளவு அற்புதமாகவும் அழகாகவும் இருக்கிறது வனப்பிரதேசம். அருவிகளையும் நீரோடைகளையும் கண்ணுக்க் குளிர்ச்சியாக படம்பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் செல்டன் சவ்.பின்னனி இசையில் படம் தூக்கலாக காணவைத்துள்ளார் ஸ்டீபன் டேவோசி. திரைக்கதையை விறுவிறுப்பாக்கியுள்ளார் படத்தொகுப்பாளர் ஆண்டனி கன்செல்வெக்ஸ். எது பக்தி என்பதை உச்சக்கட்ட காட்சியில் விளக்கியிருக்கிறார் இயக்குநர் ம்கேஷ்குமார் சிங்.
“கண்ணப்பா” திரைப்பட விமர்சனம்
