துப்பறிதலின் நுணுக்கத்தை சொல்லும் படம் ‘கொலை’

இன்பினிட்டி வெஞ்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி செளத்ரி, ராதிகா சரத்குமார், நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘கொலை’. விற்பனை பொருட்களுக்கு விளம்பர நாயகியாக நடித்திருக்கும் மீனாட்சி செளத்ரி கொலை செய்யப்படுகிறார். கொலை செய்தவர் யார்? எதற்காக கொலை செய்யப்படுகிறார்? என்பதை கண்டுபிடிக்க துப்பறிவதுதான் கதை. துப்பறிவளராக ஓய்வு பெற்ற உயர் அதிகாரியாக வருகிறார் விஜய் ஆண்டனி. அவருக்கு உதவியாக துப்பறிவு அதிகாரியாக நடித்திருக்கிறார் ரித்திகா சிங். படத்தின் முன்பகுதியிலிருந்து பின்பகுதி வரைக்கும் துப்பறிவதின் நுணுக்கங்களை சொல்லித்தருகிறார் இயக்குநர் பாலாஜி குமார். கொலை செய்யப்படுவதின் மர்மம் உச்சக்கட்ட காட்சிவரை நீடித்துக் கொண்டே போயிருப்பது ரசிகர்களை இருக்கையின் நுனிப்பகுதிக்கு கொண்டு செல்கிறது. நரைத்த தலையுடன் காட்சிதரும் விஜய் ஆண்டனியை பார்க்க அவரது ரசிகர்களுக்கு பொறுமை தேவை. துப்பறிவதில் விஜய் ஆண்டனியின் நடிப்பு உச்சத்தை தொட்டிருக்கிறது. ஆழமான சிந்தனைக்குள் முகம் அமுங்கி கிடப்பதை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்  விஜய் ஆண்டனி.**********

ரித்திகா சிங் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கி நடித்திருப்பது பாராட்டதலுக்குரியது. படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசை பக்கபலமாக அமைந்திருக்கிறது. ஒளிப்பதிவில் பல தொழிலில்நுட்பத்தை கையாண்டிருக்கும் சிவகுமார் விஜயன் வரவேற்க்கத்தக்கவர்கள்.