முதுநிலை மருத்துவப் படிப்பு ஒன்றிய அரசின் வஞ்சக செயலுக்கு கண்டனம் – முத்தரசன்

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கும் நிலையில் முதுநிலை மருத்துவப்படிப்பில் சேருவதற்குநீட்தேர்வு மதிப்பெண் அடிப்படையாக இருக்காது. அதுபூஜ்யமாககருதப்படும் என்றுமத்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.

இதனால் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் முதுநிலை மற்றும்பட்டயப்படிப்பு பயிலநீட்மதிப்பெண் அவசியமில்லை என்பதை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதன் மூலம்ஒன்றிய அரசின்தகுதிமற்றும் பொது நுழைவுத் தேர்வு கொள்கை படுதோல்வி அடைந்துள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்குநீட்தேர்வு மதிப்பெண் கட்டாயம் என நிர்பந்தப்படுத்திபிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சாதியினர், பழங்குடியினர் சமூக பிரிவுகளுக்கு அநீதிஇழைக்கப்பட்டுள்ளது. மழைக்கால புற்றீசல்கள் போல் தோன்றியுள்ளநீட்பயிற்சி மையங்கள் மூலம் பணம்பறிக்கும் சமூக கொள்ளைக்கு ஆதரவு காட்டி வரும் பாஜக ஒன்றிய அரசு – ‘தகுதி’, ‘திறன்என்ற பெயரில்அடித்தட்டு மக்களுக்கு சமூக அநீதி இழைத்து வருகிறது. இந்த சமூக அநீதி களையப்படநீட்தேர்வில்இருந்துவிதி விலக்குகேட்டு தமிழ்நாடு முனைப்புடன் போராடி வருகிறது.

இந்த நிலையில் இளநிலை மருத்துவப் படிப்பில் நீட் தேர்வு மூலம் வடிகட்டி, அடித்தட்டு மக்களின் மருத்துவக்கல்வி உரிமையை மறுத்து விட்டு, முதுநிலை படிப்பில் உயர் சாதி பிரிவினர் தடையின்றி நுழைய கதவு திறந்துவிடும் வஞ்சக செயலாகவே ஒன்றிய அரசின் செயல் அமைந்திருக்கிறது. ஒன்றிய அரசின் இந்த பாரபட்சசெயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன், ‘நீட்தேர்வு முறையை முற்றிலும் விலக்கிக் கொள்ள வேண்டும், குறைந்தபட்சம் தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு அளிக்கவேண்டும் என வலியுறுத்துகிறது.