சாதிய வன்கொடுமையை எதிர்த்து வென்ற மாணவனுக்கு பா.ரஞ்சித் பாராட்டு

நாங்குநேரி தம்பி சின்னதுரை சாதிய வன்கொடுமையை எதிர்த்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற நிலையில் நீலம்பண்பாட்டுமையம் நிறுவனர்,இயக்குனர் பா.இரஞ்சித்  தனது அலுவலகத்தில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார், “தம்பி சின்னதுரை திருநெல்வேலி, பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் பி.காம் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். இயக்குநர் பா.இரஞ்சித்  தம்பி சின்னதுரையின் கல்லூரி கட்டணம் மற்றும் எவ்வித உதவியாக இருப்பினும்  நீலம்பண்பாட்டுமையம் செய்வதற்கு தயாராக இருக்கிறது என்று உறுதியளித்துள்ளார்.