மது, காமம், மனசாட்சி மூன்றும் கலந்த உயிரோட்டமான படம் “மூன்றாம் மனிதன்”

ராம்தேவ் தயாரித்து எழுதி இயக்கியிருக்கும் படம்மூன்றாம் மனிதன்“. ஒரு காவல்த்துறை உதவி ஆய்வாளர் கண்டதுண்டமாமாக வெட்டி கொல்லப்பட்டிருக்கிறார். அவரை யார் எதற்காக கொல்லப்பட்டார் என்பதை எதிபாராத பல திருப்பங்களுடன் தங்க நகையை அலங்கரிப்பதைப்போல் திரைக்கதையை அலங்கரித்து வெளிவந்திருக்கும் படம்தான்மூன்றாம் மனிதன்“. காவல்த்துறை அதிகாரியாக வரும் இயக்குநர் பாகியராஜும் சோனியா அகர்வாலும் தவிர மற்ற எல்லா நடிகர்களும் அறிமுக நடிகர்கள் என்று நம்பவே முடியாதளவுக்கு அருமையாக நடித்துள்ளார்கள். மது பழக்கத்தால் மனைவியை இல்லற வாழ்வில் திருப்திபடுத்த முடியாத கணவன். அதனால் வழிதவறி செல்லும் மனைவி, சந்தேகத்தால் கணவனை இழக்கும் மனைவி, பாசத்தால் கொலைப்பழியேற்கும் இளஞரகள், மனசாட்சியோடு நடத்தப்படும் கொலைக்கான விசாரணைகள் என அனைத்தும் வெவ்வேறு பாதையில் பயணிக்கும் திரைக்கதையை ஒரே புள்ளியில் சங்கமிக்க வைத்த இயக்குநரை பாராட்டாமல் இருக்க முடியாது. வாழ்வை இனிமையாக்க எதை தவிர்க்க வேண்டும் எதை சேர்க்க வேண்டும் என்பதை கொஞ்சமும் விரசமில்லாமல் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது