பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம் “வா வரலாம் வா”

எஸ்.ஜி.எஸ். கிரியேட்டிவ் மீடியா சார்பில் எஸ்.பி.ஆர் தயாரித்திருக்கும் படம்வா வரலாம் வாமாசாணி, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி, நான் அவளை சந்தித்தபோது ஆகிய படங்களை இயக்கிய எல்.ஜி.ரவிசந்தர், இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். தயாரிப்பாளர் எஸ்.பி.ருடன் இணைந்து இயக்கியுள்ளார் எல்.ஜி.ரவிசந்தர் பாலாஜி முருகதாஸ் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க, கருமேகங்கள் கலைகின்றன பட நாயகி  மஹானா சஞ்சீவி கதாநாயகியாக நடித்திருக்கிறார்.  வில்லனாகமைம்கோபி நடிக்க, முதன்மையான கதாபாத்திரத்தில் ரெடின் கிங்ஸ்லீ நடிக்க காயத்ரி ரேமா, சரவண சுப்பையா, தீபா, வையாபுரி, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், பிரபாகரன்,போண்டா மணி, மீசை ராஜேந்திரநாத் , கிரேன் மனோகர், ரஞ்சன், திலீபன்,யோகி ராமசாமி, வடிவேல் பீட்டர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தவிரஇப்படத்தில் 40 குழந்தைகளும் நடித்திருக்கிறார்கள். *******

சூழ்நிலையால் சிறுவயதிலேயே சிறைக்கு சென்றஇரண்டு இளைஞர்கள் சிறையில் இருந்து திரும்பும்போதுசொகுசாக ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு துணிகர செயல்களையும் சாதாரணமாக செய்யதயாராகிறார்கள். விரைவில் பணக்காரர்களாக வேண்டும் ஆசையில் பேருந்து கடத்துகிறார்கள். பேருந்தில் 40 குழந்தைகளும் இரண்டு இளம் பெண்களும் இருக்க, அவர்களை வைத்து பணம் பறிக்க பெரும் திட்டம்வகுக்கின்றனர். இதனிடையே காதல், பாசம், பரிவு ஏற்பட்டு நண்பர்கள் இளம்பெண்கள் மீது காதல்வயப்படுகிறார்கள். இதற்கிடையில் பேருந்தில் இருந்த இரண்டு  இளம் பெண்கள் குறி வைக்கும் வில்லனின் சதித்திட்டத்தையும், காவல்துறை இவர்களைத் தேடுவதையும் நண்பர்கள்  அறிந்து என்ன முடிவு எடுக்கிறார்கள், வில்லனுக்கும் நண்பர்களுக்கும் இடையேயான தொடர்பு என்ன?அந்த இளம் பெண்கள் யார்?அந்த 40 குழந்தைகள் யார்? பேருந்து கடத்தும் ஐடியா எப்படி வந்தது? நண்பர்களின் பணம் சம்பாதிக்கும் ஆசைநிறைவேறியதா? கதாநாயகர்களுடன் கதாநாயகிகள் உடனான காதல் ஆசை நிறைவேறியதா? கொடூரசெயல்களை செய்த வில்லன் என்ன ஆனார் என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகைச்சுவையாகவும்சொல்வதேவா வரலாம் வாபடத்தின் கதை.