பசுமைத்தாயகம் பணிகளை மாவட்டங்களில் ஒருங்கிணைக்கும் பொறுப்பாளர் நியமனம்

பசுமைத் தாயகம் சார்பில் சுற்றுச்சூழல் கால நிலை மாற்றம் மற்றும் நீடித்த மேம்பாடு சார்ந்த பல்வேறு. பணிகளை மாவட்டங்கள் அளவில் ஒருங்கிணைக்கவும், பசுமைத் தாயகம் அமைப்புப் பணிகளை  முன்னெடுக்கவும், எதிர்கால பசுமைத் தாயகம் திட்டங்களை நடைமுறைப்படுத்த குரோம்பேட்டை நா.கண்ணன் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்கள் அளவிலான பசுமைத் தாயகம் ஒருங்கிணைப்பாளராக பசுமைத் தாயகம் நிறுவனர் மருத்துவர் அய்யா மற்றும் மேனாள் பசுமைத் தாயகம் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி. ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பசுமைத் தாயகம் அமைப்பின் மாவட்டத் தலைவர், மாவட்டச் செயலாளர், மாவட்ட துணைத் தலைவர்கள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை பொருப்பாளர்கள் அனைத்து நிலை என பொறுப்பாளர்களையும் தேர்வுசெய்திடவும், பசுமைத் தாயகம் தலைமை அறிவிக்கும் திட்டங்களை அந்தந்த மாவட்டங்களில்  செயல்படுத்திடவும் தேவையான பணிகளை இவர் முன்னெடுப்பார் என சௌமியா அன்புமணி அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பசுமைத்தாயகம் தலைவர் சௌமியா அன்புமணியை சந்தித்து .நா.கண்ணன் வாழ்த்து பெற்றார்.